வாழ்க வாஜ்பாய் புகழ்

ஒரு நல்ல தேச தலைவனின் இறுதி அஞ்சலி எப்படி இருக்க வேண்டும் என்ற பெரும் எடுத்துகாட்டாய் வாஜ்பாயின் இறுதி காரியங்கள் நடந்திருக்கின்றன‌

ஒரு மர்மமில்லை, வாரிசு சண்டையில்லை மகா முக்கியமாக இடம் கொடுக்கமாட்டோம் என்ற மட்டமான சர்ச்சையில்லை

முக்கியமாக என்பார்மிங் எனப்படும் இம்சைகள் இல்லை

தான் உருவாக்கிய கட்சி இந்தியாவினை மிருக பலத்தோடு ஆளுவதை கண்டுவிட்டே பெருமையோடு விடைபெற்றிருக்கின்றார் வாஜ்பாய்

பலருக்கு கிடைக்காத பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கின்றது

என் இனம் , என் மொழி, என் சாதி என் மாநிலம் என வாஜ்பாய் முடங்கி இருந்தால் இந்த மாபெரும் மரியாதையும் தேசம் மொத்தமுனான பெரும் அஞ்சலியும் கிடைத்திருக்காது

நாட்டிற்காய் அவர் உழைத்த உழைப்பிற்கு தகுந்த‌ அஞ்சலி கிடைத்திருக்கின்றது

வாழ்க வாஜ்பாய் புகழ், அவர் வழியில் நல்ல தலைவர்கள் உருவாகி வருக,

பாரதம் வெல்க‌


வாஜ்பாய் வெள்ளையரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தவர் என சொல்லி கொண்டிருப்பவர்கள் யாரென பார்த்தால்….

மவுண்ட்பேட்டன் மனைவியோடு சுற்றிகொண்டிருந்த நேருவின் கட்சியினர்

வெள்ளையனை போகாதே போகாதே என காலை பிடித்து அழுது, சுதந்திர நாள் துக்கநாள் என சொன்ன அந்த தலைவரின் வாரிசுகள்

இவர்கள் வாஜ்பாயினை கலாய்க்க என்ன இருக்கின்றது?