வாழ்த்துக்கள் கவிஞர் வைரமுத்து….
7ம் முறையாக தேசிய விருது வாங்கி தன்னை நிரூபித்திருக்கின்றார் வைரமுத்து
கிராமத்து ஏக்கமும், சோகமும், மகிழ்வும் மிக எளிமையான வார்த்தைகளில் அவரிடமிருந்து பாடலாக வரும், அவரின் பலம் அது, வரமும் அது
முதல் மரியாதை முதல் இந்த தர்மதுரை பாடல் வரை பார்த்தால் அது அழக்காக தெரியும், அவரின் கிராமம் அவருக்கு அந்த அளவு கற்றுகொடுத்திருக்கின்றது, அந்த நினைவு அவரை அந்த அளவு உயர்த்தியிருக்கின்றது
அவர் இளம்வயதில் மிகவும் நேசித்து பின் அணையில் மூழ்கிய அந்த கிராமமும், அவர் வளர்ந்த அந்த வடுகபட்டியும் அவர் மனதில் அந்த அளவு குடிகொண்டிருக்கின்றன
அந்த ஆண்டிபட்டி பக்கத்து கதைகளின் பாடல் என்றால் மனிதருக்கு கூடுதல் உற்சாகம் பற்றிகொள்கின்றது, பின்னி எடுக்கின்றார்.
கிட்டதட்ட 35 வருடமாக எழுதினாலும், சென்னையில் வசித்தாலும் அவர் தமிழ் அப்படியே இருக்கின்றது, அந்த வார்த்தை பாவனைகளும் அப்படியே கிராமத்தானாக வாழ்கின்றார்
மனதால் இன்றும் அவர் அந்த கிராமங்களில்தான் சுற்றி திரிகின்றார், 45 வருட நகர வாழ்வினைவிட 15 வருட கிராம வாழ்வு அவர் மனதில் பதிந்துவிட்டது, கலந்துவிட்டது
அந்த மண்பாசமும், அந்த நினைவுகளும் அவருக்கு இன்னும் ஏராளமான தேசியவிருதுகளை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
கிராமத்து வரிகளால் உயர்ந்து, அந்த வரிகளுக்காக உயர்விருது பெரும் வைரமுத்துவிற்கு ஒரு கிராமத்தானாக வாழ்த்துக்கள்..
அவர் மிகவும் நேசிக்கும் கலைஞர் நலமாக இருந்திருந்தால் வாழ்த்துவதை போல நாமும் வாழ்த்தலாம்..
“வைரமுத்துவின் வாழ்வில் இம்மாதிரியான பூங்காற்றுகள் திரும்பிகொண்டே இருக்கட்டும் “
எந்த உயரிய விருதுகள் என்றாலும், குஷ்பூவிற்கு வழங்காதவரை அந்த விருதின் நம்பக தன்மை சந்தேகத்திற்கிடமானது..
ஆஸ்கார் போன்றவை மட்டுமல்ல, இந்தியாவின் ரத்னா, பத்ம ,தேசிய விருதுகளும் அப்படித்தான்..