வாழ்த்துக்கள் ராஜாத்தி சல்மா அவர்களே…

Image may contain: 12 people, people smiling, people sitting

உலகெல்லாம் பெண்ணியம், இலக்கியம் பேசும் பெண்களில் பெரும் இடம் பெற்றிருக்கின்றார் Rajathi Salma

திமுக எப்பொழுதுமே பெரியார் கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இயக்கம், அப்படித்தான் தமிழகத்தில் கவனிக்கபட்ட சல்மாவினை கலைஞர் கண்டெடுத்தார், திமுகவில் இணைத்தார்

அதன் பின் சல்மாவிற்கு பெரும் புத்துணர்ச்சி கிடைத்தது, அவரின் சிறகுகள் உயர விரிந்தன‌

உலகெல்லாம் சாதனை பெண்கள் கூடும் இடமெல்லாம் அவரும் அழைக்கபடுகின்றார், ஐரோப்பா அமெரிக்காவில் இருந்தெல்லாம் அவரை சந்தித்து அம்மாணவிகள் குறிப்பெடுத்து செல்கின்றார்கள்.

அவரது எழுத்துக்களை அந்த அளவு கொண்டாடுகின்றார்கள்.

மிகபெரும் இடத்திற்கு சென்றுகொண்டிருக்கும் சல்மாவின் வளர்ச்சியில் கலைஞருக்கும் பெரியார் கொள்கைகளுக்கும் பங்கு உண்டு

இப்பொழுது மோடி ஆட்சி, ஏதோ ஜிஎஸ்டி , கருப்பு பணா சறுக்கலில் மோடி கும்பல் கொஞ்சம் அடக்கிவாசிக்கின்றது இல்லையென்றால் இந்நேரம் பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கலாம்

அப்படி நடந்திருந்தால் சந்தேகமேயின்றி மலைலா, தஸ்ரிமா நஸ்ரின் அவளவிற்கு சர்வதேச கவனத்தை ஈர்த்திருப்பார். நல்ல வேளையாக மோடி அந்த வாய்ப்பினை வழங்கவில்லை

எனினும் கட்டுபாடு மிக்க சமூகத்திலிருந்து வந்து, தன் எழுத்தால் உலக பெண்களை கவர்ந்து, இன்று உலெங்கிலும் இருந்து பல நாட்டு மாணவிகள் வந்து கவுரவிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும் சல்மாவிற்கு வாழ்த்துக்கள்

இது பெரியார் பிறந்தமண், பாரதி உலாவிய மண், என கம்பீரமாக சொல்ல திமு கழகத்து பெண்மணி சல்மா ஒரு சாட்சி

அவர் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்..