வாழ்த்துபவர்கள் வாழ்த்தட்டும்

இப்படித்தான் துடிக்கும்
“வைரவிழா என்றும், பிறந்தநாள் என்றும் என்னை வாழ்த்துகின்றீர்கள், உங்கள் வாழ்த்துக்கெல்லாம் நன்றி
இன்று காலத்தால் முடக்கபட்டுவிட்ட நான், அன்று முதலில் போராட தொடங்கிய காலங்களை, அதாவது 14 வயதிலே நான் எழுத தொடங்கிய காலங்களை நினைக்கின்றேன்
ஆம் அன்று நிலை அப்படித்தான் இருந்தது, அவர்கள் தான் ஆண்டார்கள், அவர்கள் என்றால் வெள்ளையன் அல்ல, வெள்ளையனுக்கு பிரதிநிதியாக, ஏன் கடவுளின் பிரதிநிதி என சொல்லிகொண்டே ஆண்டார்கள்
நாம் யார் என்பதை? நாம் எங்கு ? எப்படி? என்ன செய்து வாழவேண்டும் என்பதை அவர்கள்தான் நிர்மானித்தார்கள், ஆம் ஆடு மாடுகளில் ஒன்றாகத்தான் நம்மை கருதினார்கள்
முன்னாளைய அமெரிக்க நீக்ரோக்களுக்கும், திராவிட இனத்திற்கும் பெரும் வித்தியாசமெல்லாம் இல்லை
பல பெரியோர்கள் இதனை மென்மையாக கண்டித்த காலத்தில்தான், பெரியார் என்ற புயல் ஓங்கி அடித்தது அந்த பெருமழையில்தான் நாங்கள் எல்லாம் முளைத்து வந்தோம்.
இந்த கொடுமனக்காரர்களோடு, நம்மை இழிவாக நடத்துபவர்களொடு நாம் சேர்ந்து வாழ்வது சாத்த்தியமா என யோசித்தோம்
இது நம்நாடு என்பார்கள், நமக்கு கல்வி தரமாட்டார்கள். இது இந்தியா என்பார்கள் ஆலயத்தில் விடமாட்டார்கள், அவ்வளவு ஏன் எம் வீதி என அதில் கூட விடவில்லை, இன்னும் சொல்லணா துயரங்கள், அனுபவித்து பார்க்காமல் அவை எல்லாம் உணரமுடியாது, அலணலிட்ட புழுவாக நாமெல்லாம் துடித்துத்தான் திராவிட நாடு என்றோம்
அதுவும் தனி தமிழ்நாடு அல்ல, மாறாக அந்த பார்ப்பன கொடுமையால் பாதிக்கபட்ட இனங்கள் எல்லா சேர்ந்து திராவிட நாடு அமைப்போம் என்றுதான் கோரினோம்
வெள்ளையன் வெளியேறும்பொழுதே இந்நாடு மதவாதத்தால் பற்றி எரிந்தது, அருமை காந்தியின் உயிரோடு அது நின்றது.
நேரு போன்ற பெருமான்கள் காலத்தில் அந்த துவேஷங்கள் அடக்கிவைக்கபட்டன, அதனால்தான் திராவிட நாடு கொரிக்கையினை கைவிட்டார் அண்ணா
பின் இந்திரா காலத்தில் அடக்கு முறைகள் இருந்தனவே தவிர, பெரும் பார்ப்பானிய கொடுமை ஏதும் இல்லை என்பதால் நாம் அந்த அடக்குமுறை எதிர்த்துமட்டும் போராடினோம்
பின் ராஜிவ், விபிசிங் காலமெல்லாம் பெரும் சிக்கல் இல்லை, வாஜ்பாய் ஆட்சியிலும் சிக்கல் இல்லை, காரணம் அதன் அங்குசம் நம்மை போன்ற தென்னக திராவிட கட்சிகள் கையிலும் இருந்தன
மேத மன்மோகன் சிங் ஆட்சியிலும் அவலமில்லை, ஆனால் எந்த மதவெறி இந்நாட்டை பிரித்ததோ, எந்த மதவெறி அன்னல் காந்தியின் உயிரை குடித்ததோ அந்த மதவெறி மறுபடியும் தலை தூக்கும் காலமிது
இதனை கண்டிக்க வேண்டிய தமிழக அரசு, வசந்த சேனைக்கு விலங்கிடபட்டாலும், வெளிவந்தான் வசந்தன் என மகிழ்ந்துகொண்டிருக்கின்றது
வசந்தனால் ஏற்கனவே தமிழகத்தில் ஏற்பட்ட வசந்த காலத்தை உலகமே அறியும், அந்த வசந்தசேனையின் சேனை அதிபதி வசந்தனை தமிழகம் பார்த்துகொள்ளும், ஓட விரட்டும்
இப்பொழுது நான் சொல்ல வருவது 60 ஆண்டுகளாக அடக்கி வைக்கபட்ட அந்த பூதம் தலைதூக்கும் ஆபத்து பற்றி
அன்று தென்னகமே திரண்டு அந்த பூதத்தை விரட்டியது போல இன்று கேரள முதல்வர் திராவிட உணர்வோடு வழிகாட்டுகின்றார், அன்றோரு நாள் வைக்கம் கோவிலில் ஈரோட்டு சிங்கம் கம்பீரமக கர்ஜித்தது அல்லவா?. அந்த உழைப்பு வீணாகவில்லை
அருமை உடன்பிறப்பே, அந்த குரல் தமிழகத்திலும் எதிரொலிக்க வேண்டும், அதனை நாம்தான் செய்ய வேண்டும்
நாம் என்றுமே திராவிடர்கள், இந்திய மைய அரசு நல்லவிதமாக நடக்கும்பொழுதெல்லாம் நமக்கு போராட அவசியம் இருக்காது, அது இம்மாதிரி சில வேடமுகங்களில் இறங்கும்பொழுதெல்லாம் அதனை கிழித்தெறியும் கடமை நமக்கு உண்டு
80 வருடம் நாமெல்லாம் போராடி அடக்கி வைத்திருந்த அந்த பூதம் மறுபடி கொஞ்சம் தலைதூக்கும்பொழுது அதன் தலையிலே அடிக்க மனம் துடிக்கின்றது, அதன் கோரமுகத்தை பேனா முனையில் கிழிக்க சிந்தனை சீறுகின்றது
ஆனால் உடல்தளர்ச்சியினால் என்னால் முடியவில்லை, சில சொட்டு கண்ணீர் மட்டும் வருகின்றது
உடன்பிறப்பே, என் கவலை எல்லாம் 80 வருடமாக நான் போராடிய போராட்டம் எல்லாம், இந்த தமிழகம் மானமுடனும், சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என பெரியார் வழியில் போராடியதெல்லாம் வீணாகிவிட கூடாது என்பதுதான்
இந்த வைரவிழா , பிறந்த நாள்விழா வாழ்த்துக்களுக்கு நன்றி, என்றுமே இகழ்ச்சியினையும் புகழ்ச்சியினையும் ஒரேவிதமாக எடுத்துகொண்டு பழகியவன் நான், உங்கள் அன்புக்கு வாழ்த்துக்கள்
உடன்பிறப்பே, இதோ இன்னும் சில பிறந்தநாள்களை நான் காணலாம், அதன் பின் பெரியார், அண்ணாவோடு நான் துயில் கொள்ளலாம்
ஆனால் பெரியாரின் வாள் அண்ணாவிற்கு என் என்னிடம் வந்தது. நான் அதனை தளபதியியிடம் ஒப்படைத்திருக்கின்றேன்
என் சிங்கங்களே, அடலேறு வீரர்களே அந்த வாள் வீசும் கரங்களுக்கு பக்கபலமாக இருங்கள், எந்த கொடூர அடக்குமுறையினை, இழிநிலையினை எல்லாம் நாம் எதிர்த்து போராடினோமோ அதனை கருவறுங்கள்
ஆரியம் என்றால் திராவிடமாய் தென்னகத்தோடு போராடுங்கள், தமிழராய் தமிழகத்தில் தமிழையும், தன்மானத்தையும் காத்து நில்லுங்கள்
என் இறுதி தமிழ் மூச்சு உள்ளவரை உங்களோடு இருப்பேன், நாளை நான் இல்லாவிட்டாலும் என் உரைகளும், எழுத்தும், என் வரலாறும் உங்களை என்றும் வழிநடத்தும்
கிட்டதட்ட 500 ஆண்டுகாலம் செய்ய வேண்டிய காரியங்களைத்தான் என் 80 வருட வாழ்வில் செய்திருக்கின்றேன்
அந்த திருப்தியுடன் விடைபெறுகின்றேன்”
கலைஞருக்கு வைரவிழா, பிறந்த நாள் விழா என தமிழகம் மட்டுமல்ல, உலகெல்லாம் உள்ள தமிழறிந்த தமிழர் எல்லாம் கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள்
எவர் எப்படி வாழ்த்து தெரிவிப்பினும் தெரிவிக்கட்டும், நாங்கள், எங்கள் வைரச்சிலை சார்பாக கலைஞருக்கு
வைரவிழா வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வோம்.
இந்த படத்தினை விட பெரும் வைரவிழா வாழ்த்து என்னவாக இருக்க முடியும்?
அவர் வாழ்வில் மறுபடியும் அற்புதம் நிகழ்ந்திருக்கின்றது, அந்த வீடியோ அதனை சொல்கின்றது
கண் திறந்த தலைவா, வாயினையும் திறந்து பேசிவிடு