விகடனின் கழுகார் முன்னை போல இல்லை
நண்பர் Anthanan Shanmugam அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தார், விகடனின் கழுகார் முன்னை போல இல்லை, சாரமற்ற உப்பாகிவிட்டார் என சொல்லியிருந்தார்
உண்மை, மகா உண்மை, ஏனென்றால் இப்படித்தான்
பத்திரிகை உலகம் 1940களுக்கு முன் வேறு வகையறாக்களிடம் இருந்தது, அவர்கள் சொன்னதுதான் செய்தி, அவர்கள் உருவாக்குவதுதான் பிம்பம்
பெரியாரும், அண்ணாவும் அதை நொறுக்கி எழுதினர். கலைஞர் அதில் அணல் பறத்தினார்
தினதந்தி போன்றவைகள் எழும்பின, இன்னும் ஏராளமான பத்திரிகைகள் வந்தன
பெரியார் தொடங்கி வைத்த கணல் பல பத்திரிகைகளில் தெறித்தது, வணிகத்திற்காக அந்த பெரிய கை பத்திரிகைகள் கூட இறங்கி வந்தன
ஊடக சுதந்திரம் தமிழகத்தில் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.
ரகசிய செய்திகள் புலனாய்வு செய்திகள் உண்மைகள் , கணிப்புகள் என இப்படித்தான் தமிழக பத்திரிகை உலகம் இருந்தது
இதில் கலைஞரும் ஜெயாவும் அதில் கண் வைத்தபடியே இருந்தனர், சில செய்திகள் கசிவது நல்லது என்பது அவர்களின் திட்டம்
செய்திகளை கசியவிட்டு செய்ய வேண்டிய அரசியலை அட்டகாசமாக செய்தனர்.
இதை கவனித்த சோ ராமசாமியும் எல்லோரையும் கலாய்த்து தன்னை நிரூபித்துகொண்டார். சோ ராமசாமியினையும் கலைஞரும் ஜெயாவும் தடுக்கவில்லை
அப்படியும் ஒரு ஆள் இருக்க வேண்டும் என்பது அரசியல் தந்திரம்.
ஆனால் இருவரும் இல்லாத நிலையில் அனுபவமே இல்லாதவர்கள் கையில் எதிர்கட்சியும் ஆளும்கட்சியும் கிடைக்க அந்த சமநிலை குலைந்துவிட்டது
தமிழகத்தில் எந்த செய்தி வரவேண்டும், வர கூடாது என்பதை பெரும் சக்திகள் முடிவு செய்கின்றன, அவற்றை தடுப்பார் யாருமில்லை
ஏன் என்றால் நீங்களே பாருங்கள், மோடியினை சந்தித்த பத்திரிகை அதிபர்கள் பட்டியல் இதோ
பாலசுப்பிரமணிய ஆதித்தன் (தினதந்தி)
ரமேஷ்(தினமலர்)
ராம்(இந்து)
மனோஜ்குமார் சோந்தாலியா (இன்டியன் எக்ஸ்பிரஸ்)
சீனிவாசன் (விகடன்)
வரதராஜன் (குமுதம்)
குணசேகரன் (நியூஸ்18)
கார்த்திகை செல்வன் (புதிய தலைமுறை)
ராஜேந்திரன் (ராஜ் டிவி)
தேவநாதன் (வின் டிவி)
இவர்கள் நேரடியாக காலில் விழுந்தவர்கள் என்றால் மறைமுகமாக விழுந்தவர்கள் எத்தனை பேர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்
இங்கு எதை எல்லாமோ ரகசியமாக கைபற்றுகின்றார்கள், ஊடகங்களை மறைமுகமாக கட்டுபடுத்துகின்றார்கள்
அறிவிக்கபடாத எமர்ஜென்சி என்பது இதுதான்
இனி இந்த கழுகார் , ஆந்தையார் எல்லாம் பறக்காது மாறாக புறாக்கள், காக்கைகள் என ஏதாவது சும்மா கத்திகொண்டிருக்கும்
புதிய இந்தியா பிறக்கவில்லை எனினும் புதிய தமிழ்நாட்டினை பிறக்க வைக்க கடும் முயற்சி ரகசியமாக நடந்துகொண்டிருக்கின்றது
(எந்த அளவு கட்டுபடுத்துகின்றார்கள் என்றால் அண்ணாவிற்கு வந்த புற்றுநோயும் அதன் சிகிச்சையும் உலகிற்கே தெரிந்தது
அதற்கு முன்பே பெரியாருக்கு நாக்கில் வந்த கட்டியும் பரபரப்பான காலங்கள்
ஆனால் கடவுள் மறுப்பால் அப்படி ஆனது என ஆளாளுக்கு கரித்து கொட்டினார்கள், ஆனால் யாரும் வதந்தி பரப்பல் என கைது செய்யபடவில்லை
ராமசந்திரன் அமெரிக்காவில் இருந்தபொழுது , அவர் வரும்வரை ஆட்சியினை என்னிடம் கொடுங்கள் என கேட்டவர் கலைஞர், ஆனால் அதிமுகவினர் சீறினர். அவர் வருவார் என்றனர்
ஆம், வருவார் மூட்டையாக வருவார் என சொன்னவர் கலைஞர்
அன்றெல்லாம் வதந்தி பரப்பல் , கரித்து கொட்டுதல் போன்ற விஷயங்கள் இல்லை
ஜெயா அந்திம காலம் சர்ச்சையின் தொடக்கம், கலைஞர் விஷயத்திலும் கிட்டதட்ட அதே சாயல் தெரிகின்றது
இன்று என்னவெல்லாமோ நடக்கின்றன, இன்னும் நடக்கும்)
‘வடசென்னை’ டீஸர் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது – ஷாருக் கான்
டீசரில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷூக்கு கொடுக்கும் உதட்டு முத்தகாட்சி இங்கு சலசலப்பினை ஏற்படுத்த , அங்கு ஷாரூக்கானுக்கோ ஆர்வத்தை தூண்டுகின்றதாம்
ஒருவேளை ஷாருக்கானும் கமலஹாசன் ரகமோ என்னமோ?