விகடனில் கமலஹாசன் சுவாரஸ்ய பேட்டி
நாயகன் படம் ஆஸ்காருக்கு சென்றபொழுது நான் ஸ்ருதியுடன் எம்ஜிஆரை காண சென்றேன், சுருதி கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார் : விகடனில் கமலஹாசன் சுவாரஸ்ய பேட்டி
நாயகன் படம் வந்தது 1986ம் ஆண்டு அக்டோபரில், சுருதி பிறந்தது ஜனவரி 1986
அப்பொழுது சுருதி 1 வயது குழந்தை
இதில் ஆஸ்காருக்கு நாயகன் சென்ற வருடம் 1988, 1987 டிசம்பர் 24லே ராமசந்திரன் காலி
ஆக 1 வயது குழந்தையுடன் செத்து போன ராமசந்திரனை சந்தித்தேன், அக்குழந்தை திருஞான சம்பந்தர் போல பேசியது என அள்ளிவிடுகின்றார் கமல்
ஏன் அப்படி?
அரசியல் வாதி ஆகிவிட்டால் பொய் சொல்ல வேண்டும், அதற்காக இப்படி அள்ளிவிட்டால் எப்படி?
ஒருவேளை என்ன நடந்திருக்கலாம்?
சரிகாவிற்கும் வாணிக்கும் இடையில் ஏதோ ஒரு பெண் கமல் வாழ்வில் இருந்திருக்கின்றாள், அப்பெண் பெயர் சுருதியாக இருந்திருக்கலாம்
அவரோடு ராமசந்திரனிடம் ஆசிவாங்க கமல் சென்றிருக்கலாம், இப்பொழுது கமல் குழப்பத்தில் இருப்பதால் அப்பெண் இந்த சுருதி என அள்ளி விடலாம்
எனினும் இந்த கமலஹாசனிடம் இதுபற்றி கேட்பதை விட செத்துபோன ராமசந்திரனை எழுப்பி கேட்பது எளிது