விகடனுக்கு திமுக பற்றி கவலை
எல்லோருக்கும் ஒவ்வொரு கவலை என்றால் விகடனுக்கு திமுக பற்றி கவலை , ஸ்டாலின் செயல்படா தருணம் என சிலவற்றை சொல்லியிருக்கின்றது
சொல்லியிருக்கும் விஷயம் இவை தான், ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை கட்டுபடுத்தவில்லை கட்சிக்காரனுடன் பேசவில்லை. திமுக ஐடி விங் சரியில்லை, எதிரிகளை அழிக்க தெரியவில்லை, அழகிரியினை அணைக்க தெரியவில்லை என இப்படி சில தெரியவில்லைகளை சொல்லி கவலைபட்டிருக்கின்றது விகடன்
விகடனுக்கு சில பதில்ககளை சொல்லலாம்
முதலில் கட்சிக்குள் எந்த தகறாறும் இருப்பதாக தெரியவில்லை, எந்த தொண்டனும் புகார் வாசித்து மனு கொடுத்ததாக தெரியவில்லை, கட்சி அமைதியாக இருக்கின்றது
இது ஏனோ விகடனுக்கு தெரியவில்லை
அடுத்து கலைஞர் குடும்பம் பெரிதாம், இதென்ன கொடுமை? சசிகலா குடும்பம் கலைஞர் குடும்பத்தை விட மிக பெரியது, சீன பெருஞ்சுவர் போல் நீள்கின்றது, அது போக எல்லா கட்சிக்கும் குடும்பமும் அதன் ஆட்களும் இருக்கின்றார்கள் அது ஏனோ விகடனுக்கு தெரியவில்லை
அடுத்து எதிரியினை முற்றாக அழிக்கும் நீதி ஸ்டாலினுக்கு தெரியவில்லையாம், இது விகடன் எழுத்தாளர் குடிததுவிட்டு எழுதினாரா என தெரியவில்லை. இது என்ன மன்னராட்சியா? ஸ்டாலின் என்ன செங்கிஸ்கானா?
ஒரு கட்சி இன்னொரு கட்சியினை அழிக்க முடியுமா? ஏதோ கலைஞர் 100 கட்சியினை அழித்தவர் போலவும் ஸ்டாலின் மன்னித்துவிடுவது போலவும் சொல்லியிருக்கின்றது விகடன்
விட்டால் மதிமுகவினை கெடுத்தது திமுக, விஜயகாந்தின் கட்சியினை அழித்தது திமுக என சொன்னாலும் சொல்வார்கள் போல, தெரியவில்லை
அடுத்த தெரியவில்லை ஆர்.கே நகரில் அதிமுக வென்றுவிட்டதாம். அது ஜெயலலிதா தொகுதி என்பதும், ஜெயாவே தேர்ந்தெடுத்த தொகுதி அதிமுகவிற்கு எவ்வளவு பாதுகாப்பனதாக இருந்திருக்கும் என்பதும் விகடனுக்கு தெரியவில்லை
அடுத்து ஸ்டாலினுக்கு தொண்டனோடு உறவாட தெரியவில்லையாம், இதில் என்ன அவசியம்? திமுக தொண்டன் எந்நாளும் தலமையினை மனதில் வைத்து பூஜிப்பவன் கட்சி ஊடகம் அவனுக்கு சுவாசம், இதில் ஸ்டாலின் வேறு சென்று பேசவேண்டுமா?
ஸ்டாலினுக்கு ஆட்சியினை கலைக்க தெரியவில்லையாம், ஆட்சியினை உருவாக்கிய சசிகலா கோஷ்டிக்கே அதை கலைக்க வழி தெரியவில்லை, அந்த அளவு மத்திய அரசு பாதுகாத்து நிற்கின்றது அது ஏனோ விகடனுக்கு தெரியவில்லை
உறுதியாக சொல்லலாம், ஸ்டாலின் தலமையேற்று கொஞ்சநாள்தான் ஆகின்றது. வலுத்து நிற்கும் சசிகலா தரப்பு , வஞ்சகமாக ஆடும் மத்திய அரசு, இதற்கிடையில் கட்சி பாதுகாப்பு என பல விஷயங்களில் ஸ்டாலின் நன்றாகத்தான் நடத்தி செல்கின்றார், முழுக்க மோசமில்லை
கலைஞர் வேறு, ஸ்டாலின் வேறு. கலைஞரை அப்படியே ஸ்டாலினிடம் எந்த திமுகவினரும் எதிர்பார்க்கவில்லை, அது சாத்தியமுமில்லை இதுவும் விகடனுக்கு தெரியவில்லை
அழகிரி என்பவர் அடிக்கடி முறைப்பதும் பின் சமாதானம் ஆவதும் அவர் டவுசர் போட்ட காலத்தில் இருந்தே நடக்கும் விஷயம் விகடனுக்கு என்ன வந்தது
தினகரன், விவேக் , திவாகரனின் உறவு சங்கலி பற்றி தினகரன் சொல்லுமா? அத்வானியும் யஷ்வந்த் சின்காவும் பிய்த்து எறியும் பாஜக பற்றி விகடன் சொல்லுமா?
உண்மையி திமுகவின் ஸ்ரதன்மை பற்றி விகடன் அஞ்சுகின்றது, வைகோ போன்ற பிரிந்த ஆடுகள் ஒன்றாவதை கண்டு வயிற்றேரிச்சல் வருகின்றது, திமுக கூடாரம் வலுவாவதை கண்டு பெரும் கோபம்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து திமுக வெளிவந்ததில் அதற்கு தாங்கணா சோகம்
அதனால் ஸ்டாலின் ஏதாவது தவறு செய்துவிடமாட்டாரா? தூண்டி விட்டால் ஏதும் நடந்துவிடாதா எனும் நரி தந்திரத்தில் இறங்கி இருக்கின்றது விகடன்
ஸ்டாலின் இதனை கண்டுகொள்ளாமல் தன் வழியில் செல்வது நல்லது
கடைசியாக விகடன் சொன்னதுதான் காமெடி, திமுக ஐடி விங் சரியில்லையாம், இந்த நூற்றாண்டின் பெரும் காமெடி இதுதான்
அன்று பத்திரிகை உலகிலும் எப்படி திமுக தன் கொடியினை பறக்கவிட்டதோ, அப்படி இணையத்திலும் அதுதான் முண்ணணியில் இருக்கின்றது, ஆளாளுக்கு அடித்து தூள் கிளப்புகின்றார்கள்
இது பொறுக்காமல் இப்படி அழுது புலம்புகின்றது விகடன்
விகடனுக்கு என்னாயிற்று? அதுதான் தெரியவில்லை
ஆனால் இனி அடிக்கடி இப்படி அழுது புலம்பும் என்பது மட்டும் உறுதி, மொத்தத்தில் கீழ்பாக்கம் லெவலுக்கும், கோவில் வாசலில் அமர்ந்து அவன் பிச்சையிடவில்லை என புலம்பும் பிச்சைகாரன் அளவிற்கு அப்பத்திரிகை சென்றுவிட்டதுதான் சோகம், மகா சோகம்