விசால் மக்கள் நற்பணி இயக்கம் தொடஙகிவிட்டாராம்
அறிவாலயத்து வாட்ச்மேன் வேலையினை இப்படியா கேட்பது?

1967க்கு பின் சினிமாக்காரர் அல்லாத முதல்வர்கள் பன்னீர் செல்வமும் பழனிச்சாமியும்
சசிகலா அதை தவறவிட்டார்
அப்படி சினிமா பிடியில் இருந்து தமிழக அரசியல் விடுபட்டது சினிமாக்காரர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அவர்களுக்கென்ன தங்கள் துறை அரசியலை கட்டுபடுத்த வேண்டும், அதில் இருக்கும் முதல்வரை சுற்றி ஆடிகொண்டே இருக்க வேண்டும், சலுகைகளை கறக்க வேண்டும்
இது பச்சை தமிழன் பழனிச்சாமியின் இரும்பு ஆட்சியில் எடுபடுமா?
இதனால் சினிமாக்காரர்கள் ஒரு முடிவோடு களமிறங்குகின்றார்கள், ரஜினி கமல் தொடர்ந்து இப்பொழுது விசால்
அன்னாரும் மக்கள் நற்பணி இயக்கம் தொடஙகிவிட்டாராம்
வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது என வசனம் வேறு
இவரின் படத்தை பார்த்துவிட்டே அமைதியாக நகரும் தமிழகம் இது, அது ஏனோ இவருக்கு பிடிக்கவில்லை
அன்னார் தமிழத்திற்கு ஏதும் செய்ய நினைத்தால் நடிப்பதை நிறுத்தட்டும், அதற்கு வேண்டுமானால் 4 வோட்டு கண்டிப்பாக விழும்