விசித்திரமான தமிழகம் இது

இந்த ரைடில் சிக்கியிருக்க வேண்டிய இடம் வைகுண்டராஜனின் ராஜங்க பகுதிகள்

மணல் ஆறுமுகச்சாமி எந்த அளவு அதிமுகவிற்கு நெருக்கமானவரோ அதனை விட பலமடங்கு நெருக்கமாக இருந்தவர் அண்ணாச்சி

ஜெயாடிவியின் பங்குதாரர் என சகல சக்தியும் நிரம்பிய ஜெயலலிதாவாலே அறிவிக்கபட்டவர்

அப்படிபட்ட அண்ணாச்சியினை விட்டுவிட்டு இப்பொழுது மற்ற எல்லா முன்னாள் அதிமுக நிதிமூலங்களையும் பிடிக்கின்றார்கள்

தாதுமணல் தொழில் தொடர்ந்திருந்தால் அண்ணாச்சியும் இப்பொழுது பட்டாபட்டி டவுசரோடு அமரவைக்கபட்டிருக்கலாம்

ஆனால் தொழில்முடக்கம் என்பதால் அங்கு ரெய்டு இல்லை, பழைய வேகத்தில் தொழில் நடந்திருந்தால் அண்ணாச்சி சிக்கியிருக்கலாம்

அற்ற குளத்தில் என்ன மீன் இருக்கபோகின்றது என விட்டுவிட்டார்கள்

கெட்ட நேரத்திலும் அண்ணாச்சிக்கு பல நன்மைகள் விளைந்திருக்கின்றன‌


தினகரன் வீட்டு ரெய்டுக்கும்
கலைஞர்- மோடி சந்திப்புக்கும் சம்மந்தம் உள்ளது : சீமான்

திருமுருகன் கைதுக்கும் சீமான் இன்னும் வெளியே சுற்றுவதற்கும் சம்பந்தம் உள்ளது, இப்படி இன்னும் ஏகபட்ட சமந்தங்கள் சீமானுக்கும் அதிமுக அரசுக்கும் உண்டு

என்ன இருந்தாலும் அங்கிள் சைமனின் விசுவாசத்தை மெச்சியே ஆகவேண்டும், எசமானுக்கு ஒன்று என்றால் எப்படி எல்லாம் குதிக்கின்றார்??


இந்த சன்னிலியோனும், மியா கலிபாவும் யார் என Chandran Kannan என்பவருக்கு தெரியவில்லையாம்

மிஸ்டர் Chandran Kannan அவர்கள் இருவரும் துறவிகள், ஆனால் எதை துறந்தார்கள் என்பதை நீங்கள் தேடிபார்த்து தெரிந்துகொள்ளுங்கள்


ஒரு பக்கம் ரைடுகள் மிக தீவிரமாக நடக்க, இன்னொரு பக்கம் இந்த மாபெரும் சீர்கேட்டு அடித்தளமிட்ட ராமசந்திரனின் நூற்றாண்டுவிழாவும் நடக்கின்றது

ஜெயாவினை வளர்த்துவிட்டதும், ஜெயாவினை உளவு பார்க்க சசிகலாவினை அவர் அருகே அமர்த்தி பலம் கொடுத்ததும் இந்த ராமசந்திரனே

ஆக நடக்கும் அவலங்களுக்கு எல்லாம் அவரே மூலம்

அவரால் விளைந்த கொடுமைகள் ஒருபுறம் அவமானமாக தெரிய, மறுபுறம் அவருக்கு நூற்றாண்டு விழா

விசித்திரமான தமிழகம் இது.