விசித்திரமான நகரங்களில் முதலிடம் மதுரைக்கே..

மதுரையின் பிரமாண்ட திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது, அவ்வளவு பெரும் பக்த கூட்டம்

ஆனால் தேர்தல் என்று வந்தால் திராவிட கட்சிகள்தான் வாக்குகளை அள்ளும், ஏன் என்றால் ராமசந்திரன் காலத்தில் இருந்து செல்லூர் ராஜூ காலம் வரை அப்படித்தான்

மதுரை முத்து காலத்திலிருந்து அட்டாக் பாண்டி காலம் வரை அதன் அரசியல் விசித்திரமானது

பக்தி கொண்டாட்டம் என வரும்பொழுது பெரும் ஆரவாரம் காட்டும் மதுரை, வைகையாற்றில் அழகரை இறக்கும் அதே மதுரை சிலிர்க்க வைக்கின்றது

ஆனால் அதே மதுரை செல்லூர் ராஜுவினை கோட்டையில் இறக்கிவிட்டது என்பதுதான் திகைக்க வைக்கின்றது

விசித்திரமான நகரங்களில் முதலிடம் மதுரைக்கே..


ஏம்பா பாரதிராஜா, “காவேரி காய்ந்து கிடக்கும்பொழுது அழகருக்கு என்னடா பட்டு, மீனாட்ச்சிக்கு என்னடா கல்யாணம்..” என உங்கள் அல்ட்ராசிட்டி கோஷ்டிகளை கூட்டி சென்று அழிச்சாட்டியம் செய்தால் என்ன?

ஐபிஎல் என்றால் ஓடி சென்று தடுத்த கோஷ்டியினை அழகர் பக்கம் காணவே இல்லை..

சென்றால் என்ன நடக்கும் என்பது தெரியாத கோஷ்டியா அது, மீறி சென்றால் வைகையில் புதைத்துவிட மாட்டார்களா?