விஜயதாரணி ஜெயலலிதாவிற்காக …..

இந்த விஜயதாரணி ஜெயலலிதாவிற்காக பொங்குவதை கண்டால் தெரிவது ஒன்றே ஒன்றுதான்

கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதிகள் எந்த கட்சியில் இருந்தாலும் “ஒரு மாதிரி” தண்ணீர் தெளித்துவிட்டவர்கள் போலவே திரிகின்றார்கள்

நாஞ்சில் சம்பத், பொன்னார், தமிழிசை இடத்தில் அந்த பெருமையினை பெற்றுவிட்டார் விஜயதாரணி

பெண் என்பதற்காக மோகினி பிசாசை கூட கொண்டாடுவார் போலிருக்கின்றது

ஏம்மா விஜயதாரணி, இந்த ராஜிவ் கொலையாளி தனு கூட பெண்தான், கொண்டாடிவிடலாமா? நளினியினை வெளியே விட்டுவிடலாமா?

இந்த கன்னியாகுமரி கோஷ்டிகளின் இம்சை தாளவில்லை, இதனை தமிழகத்தோடு இணைக்க போராடி அக்காலத்தில் பல பேர் உயிரை எல்லாம் விட்டார்களாம்?

அதெல்லாம் ஏன்?

அப்படியே விட்டிருந்தால் கூட இந்த இம்சைகள் செய்யும் அரசியலுக்கு இந்நேரம் கேரளா “இந்த கன்னியாகுமரியினை நீங்களே வைத்துகொள்ளுங்கள்” என தள்ளிவிட்டு சென்றிருக்கும்