விஜயினை வைத்து கலாநிதி மாறன் படம் சர்கார்

Image may contain: 1 person, beard and text

கலாநிதி மாறன் மிக சிறந்த வியாபாரி, கலைஞர் குடும்பத்துடன் சில சர்ச்சைகளை தவிர அவரின் நகர்வுகள் முழுக்க முழுக்க வியாபார நகர்வு

சில காலம் அமைதியாக இருந்தவருக்கு எங்கிருந்தோ சிக்னல்கள் கிடைக்க மறுபடியும் திரைபடம் தயாரிக்க வந்துவிட்டார், நிச்சயம் பின்னால் ஏதோ நடந்திருக்கின்றது

திமுக அபிமானி என்றால் கலாநிதி மாறன் மூன்றாம் கலைஞரான உதயநிதியினை வைத்துத்தான் படம் தயாரித்திருக்க வேண்டும், நகுலை வைத்து நாக்க முக்க ஆடவைத்தவர்களுக்கு உதயநிதி என்பவர் தயக்கமே இல்லாதவர்

ஆனால் நேரம் பார்த்து குறி பார்த்து ரஜினி, விஜய் என செல்கின்றார்கள்

ரஜினி நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கபடவில்லை ஆனால் படபிடிப்பு தொடங்கியாயிற்று, காலாவில் விழுந்த ரஜினி மீண்டு எழ கடும் முயற்சியில் இருக்கின்றார் , ஏற்கனவே எந்திரன் எடுத்த அனுபவம் கலாநிதிமாறனுக்கும் உண்டு

இப்பொழுது விஜயினை வைத்தும் கலாநிதி மாறன் படம் தயாரிப்பதுதான் பரபரப்பு செய்தி,

காரணம் மூன்றாம் கலைஞருக்கும் விஜய்க்கும் பொருந்தாது, விஜயினை எதிர்த்தே களம் கண்டவர் மூன்றாம் கலைஞர்

அப்படிபட்ட சர்ச்சையில் கலைஞர் குடும்பத்தாரின் தயாரிப்பில் விஜய் நடிப்பது மகா ஆச்சரியம், இயக்கம் ரஞ்சித் என்றாலும் விஜய் சோலியினை முடிக்க போகின்றார்கள் என சொல்ல்விடலாம் ஆனால் இயக்கம் முருகதாஸ் என்பவராம்

முருகதாஸ் என்பவர் சும்மா அல்ல, அவருக்கு கீழ் கொரியா முதல் ஹாலிவுட் வரை ஏராளமான இயக்குநர்கள் பணிபுரிகின்றர்கள், அவர்கள் பல படங்களை எடுத்து திரைக்கு அனுப்புவார்கள், அதிலிருந்து முருகதாஸ் தனக்கு தேவையானதை எடுத்துகொள்வார், படமும் வெற்றிபெறும்

இப்பொழுது படத்தின் தலைப்புத்தான் ஆச்சரியம் “சர்கார்” என்பதாம்

வைகோவின் பேச்சை கேட்ட தமிழகத்தில் சர்கார் என்றால் அரசாங்கம் என சொல்லி தெரியவேண்டியதில்லை

கல்லகுடி எனும் ஊர் டால்மியாபுரம் ஆனதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த குடும்பத்தின் சினிமா பெயர் “சர்கார்”

ஏன் அப்படி வைத்தார்கள்?

நாட்டிலும் தமிழகத்திலும் நடப்பது பாஜக ஆட்சி, “சாவர்கர்” என வைத்தால் அவர்கள் மிக்க சந்தோஷபடுவார்கள் அல்லவா?

ஆனால் அப்படி “சாவார்கர்” என வைத்தால் சர்ச்சையும் கிளம்பும் என்பதால் வா என்பதை மட்டும் நீக்கிவிட்டு சர்கார் ஆக்கிவிட்டார்கள்

இந்த விளக்கத்தை ஜன்னலுக்கு அந்தபக்கம் நின்று தமிழிசை காதில் கிசுகிசுத்தாலோ, இல்லை எச்,ராசாவிற்கு துண்டு சீட்டு எழுதி கொடுத்தாலோ விஜய் படத்தை எதிர்ப்பார்களா?

விஜய்க்கு எதிரிகளே அவர்கள்தானே, இது சாவார்கர் பெயர் என சொன்னால் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆழ்வார் விஜயாக ஆகிவிட மாட்டாரா?

இப்படி கலைஞர் குடும்பத்து உள்வீட்டு அரசியல், கலாநிதி மாறனின் வியாபாரம், பாஜகவினை சமாதனபடுத்துதல் என பல விஷயங்களை கலந்து சர்கார் படம் வரபோகின்றது

இது மூன்றாம் கலைஞர் வீட்டில் புயல் வீசும் நேரம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

இந்த அறிவிப்பு மூலம் இப்பொழுது கலாநிதி மாறன் உலகிற்கு சொல்லி இருக்கும் செய்தி என்னவென்றால், “முக ஸ்டாலினுடன் எங்களுக்கு சுமூக உறவு இல்லை, மூன்றாம் கலைஞரின் அரசியல் பிரவேசத்தை நாங்கள் ஏற்றுகொள்ள போவதே இல்லை..”


Image may contain: 4 people, people smiling, hatஎன்னது இரண்டாம் வ.உ.சியா?

எண்ணெய் செக்கில கட்டி அடிக்க போறானுக மிஸ்டர் விஜய்…..


 

Image may contain: 1 person, textஏண்டா சர்கார்னு பேர் வச்சே?

அவர்தாங்க முதல் படத்துல நான் சர்.. சர்ர்னு போறதுக்கு கார் கொடுத்தாரு, அதான் “சர்கார்”னு வச்சிட்டேன், நன்றியுள்ள மனசுண்ணே இது..