விஜய்சேதுபதியின் திடீர் சமுதாய அக்கரை

Image may contain: 1 person, beard
இந்த விஜய்சேதுபதி என்பவர் திடீரென சமுதாயம் மேல் கவலைபட்ட நபராக என்னவெல்லாமோ பேசிகொண்டிருந்தார், வழக்கமாக நடிகர்களுக்கு வரும் அரசியல் போதை அவருக்கும் வந்திருக்கலாம் என உலகம் நினைத்துகொண்டது

ஆனால் நக்சல்களுக்கும் தேசவிரோத சக்திகளுக்கும் அவர் உதவினார் என வரும் செய்திகள் ஆபத்தானவை

 

அவரும் நான் உதவினேன், ஆனால் யாருக்கு உதவினேன் என்பது என் சிக்கல் இல்லை என்பது போல மழுப்பி இருக்கின்றார்

இது சாதாரண விஷயம் அல்ல‌

தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் எப்படி எல்லாம் வசூலிக்கின்றன என்பதற்கு இது பெரும் எடுத்துகாட்டு

உளவுதுறையும் காவல்துறையும் இணைந்து இந்த சக்திகளை அவசரகோலத்தில் களை எடுக்கவேண்டிய நேரமிது

இந்த விஜய்சேதுபதி என்பவரை விசாரிக்க வேண்டிய வழியில் விசாரித்தாலே உண்மைகள் கொட்டும்

இந்த தும்பிகள் கொஞ்சநாளாக அவரை ஒருமாதிரி கொண்டாடியதிலே சந்தேகம் வந்தது

பொதுவாக தும்பிகள் வழியே சென்றாலே தமிழகத்தின் அத்தனை சமூக விரோதிகளையும் பிடித்துவிடலாம்


இந்த அஜித்குமார் என்பவர் நடிக்க வந்து 26 வருடம் ஆகிவிட்டதாம், ஆனால் அவர் இன்னும் நடிக்கவே இல்லை என்பதுதான் மகா சோகம்

26 ஆண்டுகள் ஆகியுமா நடிப்பு வரவில்லை?