விஜய் மல்லையா கிறிஸ்மஸ் கொண்டாட உற்சாகமாக காத்திருக்கின்றார்

இந்த இங்கிலாந்துகாரர்களை புரிந்துகொள்வதே சிரமம். மற்ற ஐரோப்பிய மக்கள் லண்டனுக்கு வருகின்றார்க்ள் என சொல்லி ஐரோப்பிய யூனியலிருந்தே பிரிந்தார்கள்

அகதிகள் செல்லவும் கட்டுப்பாடு, இப்பொழுது விசாக்களிலும் மிக கடுமையான கெடுபிடி. சந்தேகத்தின் பேரில் பலரை திருப்பி அனுப்புகின்றார்கள்

ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் பிரிவினைவாதிகள், மல்லையா போன்ற மோசடிபேர்வழிகளை சம்பந்தபட்ட நாடு கதறி கேட்டாலும் கொடுப்பதில்லை

ஒரு குற்றமும் இல்லா அப்பாவிகளை கழுத்தை பிடித்து வெளியே தள்வதும் ஒரு நாடு நாடு தேடும் குற்றவாளிக்கு சீவிமுடிந்து சிங்காரித்து அழகு பார்ப்பதும் அவர்கள் குணம்

விஜய் மல்லையா கிறிஸ்மஸ் கொண்டாட உற்சாகமாக காத்திருக்கின்றார்

ஆக மல்லையா போன்ற பணக்காரர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு போலிருக்கின்றது