விஜய் மல்லையா, விஜய் பட தயாரிப்பாளர் கடன் வாங்கினார்ககள்…
விஜய் மல்லையா கடன் வாங்கினார், விஜய் பட தயாரிப்பாளர் கடன் வாங்கினார் என வங்கிகள் காட்டும் நஷ்ட கணக்கு ஏராளம்
ஆனால் இந்த வங்கிகள் மூலம்தான் மக்கள் கணக்கு வழக்குகளை வைத்துகொள்ளவேண்டுமாம், பண பரிவர்த்தனைகள் எல்லாம் வங்கிகள் மூலமே நடக்க வேண்டுமாம்
அதாவது மக்கள் பணமெல்லாம் வங்கியிலே இருக்கவேண்டும், வங்கி யாருக்கும் பணம் கொடுக்கலாம், நன்கொடையாக, வாரா கடனாக கொடுக்கலாம், வட்டி வசூலிக்கலாம், சம்பாதிக்கலாம்
அல்லது வங்கி மூலமாக பெரும் தொழிலதிபர்கள் பொதுமக்கள் பணத்தினை ஏப்பம் விடலாம்
ஆனால் பொதுமக்கள் வங்கி வாசலில் நின்றே தீரவேண்டும், அது அவர்கள் தலையெழுத்து
வங்கிகளின் செயல்பாட்டினை யாரும் கேள்வி கேட்க முடியாது
முதல் கொள்ளை கும்பல் வங்கியும் அதன் வட்டி முறைகளுமே, அங்கீகரிக்கபட்ட கொள்ளை அது.
கையில் வைத்தால் கருப்பு பணமாம், வங்கியில்தான் இருக்க வேண்டுமாம், வங்கி தொழில்வளர்ச்சி என பெரும் தொழிலதிபர்க்கு அள்ளிகொடுத்துவிட்டு கண்ணை மூடி கொள்ளுமாம்
தொழிலதிபர்கள் இங்கிலாந்தின் அழகிய மலைசிகரங்களில் மல்லாக்க கிடப்பார்களாம்
ஆக தொழிலதிபர்கள்+வங்கி கொள்ளைக்கு துணைபோக வங்கி வாசலில் மக்களை நிறுத்துகின்றது அரசு.
ஆக நாட்டில் பொருளாதார மாற்றம் ஏற்படவேண்டுமென்றால் வங்கிகளுக்கும், ஆடிட்டர்களுக்கும் பெரும் கட்டுப்பாடு விதிக்கவேண்டுமே தவிர, மடியில் மொத்தமே 500ரூபாய் வைத்திருக்கும் சாதாரண குடிமகனுக்கு அல்ல
இன்று என்ன் அறிவிக்க போகின்றார்களோ பார்க்கலாம்
எல்லாவற்றிற்கும் கட்டுபாடுகளை விதிக்கும் அரசு, கட்சி தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் சில கட்டுபாடுகளை விதிக்க கூடாதா?
ஊடகங்களுக்கும் அவற்றின் இம்சைகளுக்கும் ஒரு கட்டுப்பாடு விதிக்க கூடாதா?
தமிழகத்து டாஸ்மாக் இம்சைகளுக்கு ஒரு ஆலோசனை சொல்ல கூடாதா?
மணல் கொள்ளை, குடிநீர் வியாபாரம் பற்றி எல்லாம் ஒரு கட்டுபாடு விதிக்க கூடாதா?
இதனை எல்லாம் செய்ய மாட்டார்கள், மாறாக கையிலிருபதை புடுங்கிகொள்வதில் அதீத ஆர்வம்