விஞ்ஞான மழை பெய்ய வைக்க மனிதனால் முடியவில்லை
இயற்கையினை மாற்றுவதில் மனிதன் வெற்றி பெற்றுகொண்டிருக்கின்றான்.
இயற்கை தனக்கு கொடுத்த எல்லைகளை எல்லாம் உடைத்தெறிந்து தன்னால் முடியாது எதுவுமில்லை என்று நிருபித்துகொண்டிருக்கின்றான்,
பலம் குறைந்த மனிதன் எந்திரங்களினால் ஆயிரம் யானை பலத்தை பெருகின்றான், மிருகங்களை விட அவனால் எந்திரத்தால் வேகமாக ஓட முடிகின்றது
மீன்களை விட வேகமாக கடலை கடக்க முடிகின்றது
இயற்கையினை பல இடங்களில் வென்றுவிட்டான்
சூரியனை போல பெரும் வெப்பத்தை அவனால் அணுவினால் கொடுக்க முடியும், அண்டார்டிக்கா குளிரினை அவனால் அறைக்குள் உருவாக்க முடியும்.
இருந்த இடத்தில் இருந்துகொண்டே கடவுளை போல அவனால் உலகை காண முடியும், அவ்வளவிற்கு அவன் தன் அறிவினை கொண்டு வசதிகளை பெருக்கிகொண்டான்
இருந்த இடத்தில் இருந்து எல்லா மனிதரையும் அவனால் பார்க்க முடிகின்றது, எங்கோ இருந்துகொண்டு எல்லொருடனும் பேச முடிகின்றது
நொடியில் எங்கும் செல்ல முடிகின்றது, நொடியில் நகரை உருவாக்க முடிகின்றது, நொடியில் அழிக்கவும் அவனால் முடிகின்றது
எவ்வளவு பெரும் வெள்ளமானாலும் அணைகட்ட அவனால் முடியும்
எவ்வளவு பெரும் உயரமாயினும் அவனால் பறக்க முடியும், கோள்களையே தாண்ட முடியும்
பஞ்ச பூதங்களில் சிலவற்றை குட்டிபூதமாக உருவாக்க முடியும் மனிதனால் மழையினை மட்டும் நெருங்க முடியவில்லை
எங்காவது மேகம் கூடினால் , அங்கு சில பொடிகளை தூவி குறைபிரசவாக மழைபெய்ய வைக்க அவனால் முடிகின்றது
மற்றபடி விஞ்ஞான மழை பெய்ய வைக்க அவனால் முடியவில்லை
செயற்கை குளிர், செயற்கை வெப்பத்தை, செயற்கை ஒளியினை நொடியில் உருவாக்கும் மனிதனால் நொடியில் மேகத்தை உருவாக்கி, நொடியில் மழையினை கொட்ட வைத்தால் எப்படி இருக்கும்?
சொட்டு தண்ணீருக்காக கண்ணீரோடு தவமிருக்கும் தமிழக விவசாயிகளை, காலி குடங்களோடு தமிழகம் நடுதெருவுக்கு வரும் காட்சிகளை காணும் பொழுதெல்லாம் இதுதான் நினைவுக்கு வருகின்றது
விஞ்ஞானம் அதில் வெற்றிபெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
எச்சரிக்கை
ஆப்பரேஷன் எண்டபே அடுத்த பதிவு எப்பொழுது வரும் என கேட்பவர்கள் கவனிக்கவும்
இப்படியே குஷ்பூ தொடரையும் படிப்போம் என சூடமேற்றி சத்தியம் செய்தால் மட்டுமே அடுத்த தொடர் வரும்..