மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா

Image may contain: 1 person, sitting

மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா, இனி ஆறுமுக சாமி கமிஷன் முன் பேசுவார்

என்ன பேசுவார்?

“2016 செப்டம்பர் 22ம் தேதி காலையில கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா, அக்கா காபி கேட்டாங்க…” என்ற ரீதியில் நிச்சயம் கமிஷனை தெறிக்க விடுவார்.

யாரையும் இந்த கமிஷன் உருப்படியாக விசாரித்ததாக தெரியவில்லை

நிச்சயம் சசிகலா விசாரிக்கபட வேண்டியவர், ஆனால் லண்டன் டாக்டர், சிங்கப்பூர் பிசியோ தெரப்பிஸ்ட் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அடிக்கடி சந்தித்த வெங்கய்யா நாயுடு , கருப்பு பூனை படை அதிகாரி என விசாரிக்க வேண்டிய கூட்டம் ஏராளம் உண்டு,

அவர்கள் பக்கமே ஆறுமுகசாமி செல்லவில்லை, அவர்களை விட்டுவிட்டு ஜெயா வீட்டு வாட்ச்மேன், அப்பல்லோ கிளர்க் என யாரையெல்லாமோ விசாரிக்கின்றனர்

போகிற போக்கை பார்த்தால் “விஞ்ஞான முறையில் ஜெயா உயிரிழந்தார்” என முடிவு வரும்போலிருக்கின்றது,

தமிழகத்தில் பொதுவாக கமிஷன் முடிவு வராது, வந்தால் இப்படித்தான் இருக்கும்