விட்டால் அழுதுவிடுவார்கள் போலிருக்கின்றது
காவேரி விவகாரம் முடிந்துவிட்ட நிலையில் வாரியம் அமையாது, ஒருநாளும் தமிழருக்கு நீதி கிடைக்காது என சொல்லிகொண்டிருந்த அல்லது நம்பிகொண்டிருந்த சைமன் கோஷ்டி, திருமா கோஷ்டி, திருமுருகன் கோஷ்டி எல்லாம் மிகுந்த வேதனைக்கு ஆளாகிவிட்டன
விட்டால் அழுதுவிடுவார்கள் போலிருக்கின்றது
இப்பொழுது வாரியம் தானே அமைந்தது, அரசிதழில் அச்சிட மட்டும்தானே போகின்றார்கள். தண்ணீர் வரவா போகின்றது என ஆறுதல் அடைகின்றார்கள்
நாளை தண்ணீர் வந்தால் என்ன சொல்வார்கள் தெரியுமா?
தண்ணீர் வந்தால் மட்டும் விவசாயி வாழவா போகின்றான்? எவன் விவசாயம் பார்க்க போகின்றான், இந்த அரசு விவசாயிகளை வாழவா விடும், இது தமிழர் விரோத அரசு.