விமான மிரட்டல் ராகுல் வரைக்கும் வந்தாயிற்று
இந்திரா குடும்பத்தை துரத்தும் விமான விமான மிரட்டல் ராகுல் வரைக்கும் வந்தாயிற்று
ஆம், சஞ்சய் காந்தியின் முடிவு நாடறிந்தது
சென்னையில் ராஜிவ் கொல்லபட்ட கூட்டத்திற்கு அவர் வருவதற்கு முன் ஐதரபாத்தில் விமானம் பழுதானது, முன் கூட்டியே வந்திருந்தால் அச்சம்பவம் தவிர்க்கபட்டிருக்க வாய்ப்புன்டு
விமானம் பழுதானதும் முதலில் கூட்டம் ரத்து செய்யபடும் முடிவு இருந்தது ஆனாலும் கடைசி நேரத்தில் அந்த விமானம் சரியாகி ராஜிவ் சென்னைக்கு வந்து மகா அவசரமாக கூட்டத்திற்கு வரும்பொழுது கொல்லபட்டார்
அந்த கூட்டம் தாமதமாக குழப்பமாக தொடங்கியதும் சிவராசனுக்கு வாய்ப்பாயிற்று
இப்படி எல்லாம் விமான சோகங்கள் உள்ள நிலையில் நேற்று ராகுல் காந்தியும் அதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இருந்து தப்பி இருக்கின்றார்
கன்னட தேர்தல் விஷயமாக கடும் பிரச்சாரத்தில் ஈடுபடும் அவருக்கு இச்சோதனை நிகழ்ந்திருக்கின்றது, எனினும் எதிர்கால பிரதமராகும் விதி இருப்பதால் தப்பிவிட்டார்
இது நிச்சயம் நாசவேலை என்கின்றது காங்கிரஸ் தரப்பு. சில விசாரணைகளும் நடக்கின்றன
ராஜிவ் குடும்பம் காலிஸ்தான் முதல் புலிகள் வரை ஏக மிரட்டலுக்கு இடையில் நடமாடும் குடும்பம் என்பதால் சந்தேகம் பல கோணங்களில் செல்கின்றன
நல்ல வேளையாக ராகுலுக்கு சிறு சிராய்பு கூட இல்லை, அப்படி ஏதும் நடந்தால் கன்னடத்தில் பாஜக டெப்பாசிட் வாங்கும்?
இதனால் கடவுளுக்கு நன்றி கூறிகொண்டிருக்கின்றது பாஜக