விம்பிள்டனில் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் பெரியாரின் கைத்தடிக்கு வேலை வந்துவிட்டது : கீ.வீரமணி
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்
அதில் அக்கால அமிர்தராஜ் போன்ற சில தமிழர்கள் முன்பு பங்கெடுத்தார்கள், அந்த வரிசையில் கலந்து கொள்ள போகின்றார் ஜீவன் நெடுஞ்செழியன்
திராவிட ஆட்சி என்ன செய்தது என கேட்பவர்கள் எல்லாம் காதை கொண்டுவாருங்கள் திருகி சொல்கின்றோம், இதோ ஒரு தமிழன் விம்பிள்டன் விளையாடும் அளவு உருவாக்கிவிட்டார்கள்
இந்த திராவிட தமிழன் எப்படி விம்பிள்டன் விளையாட செல்கின்றான் என்றால், இவரின் தாத்தா நெடுஞ்செழியன் ஊட்டிய திராவிட உணர்வு அப்படி
ஆம் இவர் அவரின் பேரன்
தாத்தா எல்லா இடத்திலும் 2ம் இடத்திலே இருந்தவர், அப்படி அவரின் பேரன் இல்லாமல் முதலிடம் பிடித்தால் நல்லது அல்லது தாத்தா போல இரண்டாம் இடம் கிடைத்தாலும் தமிழருக்கு மகிழ்ச்சி
GST ஆரிய படையெடுப்பின் உச்சகட்டம், பெரியாரின் கைத்தடிக்கு வேலை வந்துவிட்டது- கீ.வீரமணி
ஆரியன் என இவர்கள் சொல்லும் பிராமணன் கூடத்தான் ஜிஎஸ்டி கட்டபோகின்றான், அவர்களுக்கு என்ன விலக்கா கொடுக்கபட்டிருக்கின்றது?
அதுசரி மிஸ்டர் வீரமணி, பெரியாரின் கைதடிக்கு வேலை வந்தது இருக்கட்டும், பெரியாரின் பணபெட்டிக்கு எப்பொழுது வேலை வரும்? அதனை சொல்லுங்கள்.
ஓஹோ பெரியாரின் சொத்து வருமானத்தில் ஜிஎஸ்டி கட்ட வெண்டும் என்ற வயித்தெரிச்சலா?
பெரியார் சொத்து கொடுக்கும் வருமானத்தில் யாராவது கைவத்தால் இவருக்கு உடனே அவரின் கைத்தடி நினைவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது?