விருது வழங்காதது அரசியல் இருட்டடிப்பு: பா. விஜய் சீற்றம்

எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருதும் வழங்காதது அரசியல் இருட்டடிப்பு: பா. விஜய் சீற்றம்

இது என்ன அட்டகாசம்? அப்படியானால் முன்பு இவர் விருது வாங்கியதெல்லாம் அரசியல் வெளிச்சமா?

வைரமுத்து தன்னை இன்றும் நிரூபிக்கின்றார், தேசிய விருதுகளை வாங்கி குவிக்கின்றார், திறமைக்கு தடை இல்லை

இன்று நா.முத்துகுமார் இல்லை , அவர்தான் மூன்றுவருடத்திற்கான கவிஞர் விருது அவருக்குத்தான் கொடுக்கபட்டிருக்கின்றது

உண்மையில் கலைஞருடன் பழகுகின்றேன், அவர் கதை வசனத்தில் நடிக்கபோகின்றேன் என திசைமாறியவர் இவர்தான், அதன்பின்புதான் இவரின் பாடல்கள் சுரமற்றுபோயின‌.

முத்துகுமாரின் முன்பு இவர் நிற்கமுடியாமல் ஒதுங்கி நின்றது உண்மை அதனை உணர மறுத்து என்னமோ சொல்லி புலம்புகின்றார்.

இந்த காலகட்டங்களில் பா.விஜய் என்றொரு கவிஞன் இருப்பதே இப்பொழுதுதான் தெரிகின்றது

இளைஞன் படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது தரவில்லை என இவர் சீறாதவரை சிக்கல் இல்லை

உண்மையில் தமிழகம் ஒரு திரைகவிஞரை புறக்கணிக்கின்றது என்றால் அது கவிஞர் தாமரையினை, (Kavignar Thamarai )அவரின் பாடல்கள் நிச்சயம் விருதுக்கு தகுதியானவை

ஆனால் என்ன காரணமோ அவர் பெயர் விருதுபட்டியலில் வரவில்லை, ஒருவகையில் இது பெரும் அநீதி

அவர் இப்படி சொன்னால் அது நியாயம், ஆனால் அவரோ ஒரு அலட்டலும் செய்வதில்லை, எழுதிவிட்டு அவர்போக்கில் இருக்கின்றார், நிறைகுடங்கள் அப்படித்தான்

மற்றபடி இந்த சினேகன், மனுஷ்யபுத்திரன், கனிமொழி இன்னும் சில நவீனத்துவ இம்சைகள் இப்பொழுது இந்த பா.விஜய் என சில கவிஞர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை