விரைவாக வாரும்

சுவர் இல்லாமல் சித்திரமில்லை, நீர் நிலையாய் நிற்க நாங்கள் எல்லாம் வரைந்து மகிழ்ந்தோம்

கல் இல்லாமல் சிலை இல்லை, உம்மை நொறுக்கி அடித்து உடைத்து அழகிய சிற்பம் வடித்தோம்

மரம் இல்லாவிட்டால் பறவைகள் எங்கு தங்கும்? நீர் நீட்டிய கிளைகளில் மகிழ்ந்து ஆரவாரமாக மகிழ்ந்தோம்

நீர் களத்தில் இருந்தவரை அந்திமாலை பறவை கூட்டமாக எவ்வளவு ஆரவாரமாக நாங்களெல்லாம் இருந்தோம்

இப்பொழுதெல்லாம் நீங்கள் கனத்த அமைதி, அதனால் வற்றிவிட்ட நதிகரையில் இருப்பது போல் ஒரு வெறுமை மனதில் அமர்கின்றது

காட்டாற்று வெள்ளமாக நீர் பொய்களை அவிழ்த்துவிட்டால்தானே நாங்கள் உண்மை அணைகளை கட்டி அதை தடுக்க முடியும்?

இதோ ஏராளமான ஆதார கற்களுடன் காத்திருக்கின்றோம், காட்டாறான நீங்கள்தான் வரவில்லை

நீங்கள் பொய்களால் ஏரியினை நிரப்பினால்தானே நாங்கள் உண்மை வரலாற்றை பேசிகொண்டு படகில் சுகமாக வரமுடியும்?

என்னாச்சி அய்யா உங்களுக்கு?

கச்சதீவு மீட்கபடவில்லை, இனவிடுதலை நடக்கவில்லை, ராஜபக்சேவுக்கு பக்கவாதம் கூட வரவில்லை, அட அவன் மீசையினை கூட மழிக்கவில்லை இந்த உலகம்

கலைஞர்தானே உங்கள் எதிரி இதோ அவருமில்லை, இனதுரோகி சோனியாவும் ஓய்வு

எதிரிகள் ஓய்ந்துவிட்டபின்பு உங்களை ஏன் காணவில்லை?

என்னாச்சி அய்யா உங்களுக்கு?

வாருங்கள் எங்கள் பொய்யனாரே, முழுக்க பொய்களால் அருவி போல கொட்ட உங்களையன்றி யார் உண்டு?, அதை வடிகட்டி வடிகட்டி மீன்பிடிப்பது போல் பிடிப்பது ஒரு சுகம் தெரியுமா?

சுரங்கத்தில் இருந்து வருவது போல மணலாய் கொட்டுவீர்கள், அதில் உங்கள் பொய்யினை பிரித்தெடுப்பது எவ்வளவு சுவாரஸ்யம் தெரியுமா?

என்னாச்சி அய்யா உங்களுக்கு?

பனைமரத்தில் இருந்து பால் இறக்கினேன் என சத்தியம் செய்வீர்கள், அது கள் என சண்டைபோட்டு ஊருக்கு சொல்வது எவ்வளவு நல்ல பொழுது போக்கு தெரியுமா?

எங்கள் பொய்மொழியே, நாய்கத்தல் நாயகனே

என்னய்யா ஆச்சி உங்களுக்கு?

சிலர் இந்தியாவின் பாகிஸ்தானின் மேலான தாக்குதலுக்கு பின் , சில முடிவுகளுடன் களமிறங்கிய பின் உங்களை காணாவில்லை என்கின்றார்கள்

அவர்களுக்கு என்ன தெரியும் புலியே ?

சிங்களபடையின் எரிகனைக்கும், இஸ்ரேலிய விமான தாக்குதலுக்கும் அசால்ட்டாக தப்பி வன்னிகாடுகளில் சுற்றியவன் நீ

கைதுப்பாக்கி வைத்தே ஹெலிகாப்டரை வீழ்த்தியன் நீ

ஏகே 47 வைத்து வன்னியில் இருந்து கொழும்புக்கு குறிபார்த்தவன் நீ, அந்த பொட்டம்மான் தடுக்காவிட்டால அன்றே ராஜபக்சே காலி

கோத்தபாயா உன்னை கண்டே அலறினான், பொன்சேகா உனக்கு பயந்தே தலைமறைவாயிருந்தான்

ஒரே தோட்டாவில் ஒன்பது பேரை கொன்ற சாகசகாரன் நீ

27 வகை உணவையும் ஆமைகறியினையும் உண்டுவிட்டு 6 மாதம் தூங்கிய கும்பகர்ணனும் நீ

புலிகளின் வான்படையில் இந்திரஜித்தனாய் இருந்தவனும் நீ

உன் அருமை யாருக்கு தெரியும் வீரபுலியே, வரிபுலியே?

உலகையே எதிர்த்த பிரபாகரனின் தம்பி நீ, இந்த இந்திய படைக்கா அஞ்சுவாய்

உலகின் 4ம் ராணுவத்தை விரட்டிய புலியின் வாரிசு நீ, உன் அண்ணன் பெயரை சொன்னாலே இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு அப்பக்கம் ஓடாதா?

வா வீரனே வா, நீ ஓடிவிட்டாய் அஞ்சிவிட்டாய் என சொல்பவர்களுக்காக வா..

சுற்றி வளைத்தால் சாவுக்க்கு அஞ்சுபவனா நீ, அண்ணனின் சயனைடு இருக்க பயமேன் வா..

மிராஜ் விமானம் வந்தால் உன் கவண் கல்லால் அடித்துவிட மாட்டாயா? மிக் ரக விமானம் வந்தால் உன் செருப்பாலே வீழ்த்திவிட மாட்டாயா?

ஹெலிகாப்டர் வந்தால் எலிகண்ட பூனையாக பாய்ந்து நொறுக்கிவிட மாட்டாயா?

அண்ணன் கொடுத்த பயிற்சியினை அகிலம் காண வேண்டாமா?

அழைக்கின்றோம் வா..

மாவீரன் ரஜினிகாந்தே உமக்கு பயந்து அஞ்சி கட்சி தொடங்காமல் ஓடியபின்னுமா நீர் அமைதி?

இதோ உளியோடு நிற்கின்றோம் பளிங்கு கல்லாய் வருக, வலையோடு நிற்கின்றோம் பொய் மீன்கள் துள்ளும் ஆறாய் வருக..

ஏக்க பெருமூச்சோடு அழைக்கின்றோம், அதே சீமானாய் வாருங்கள்

“நெருப்பாய் இருப்பாய் தமிழா “என நீர் வந்தால்தான் யாருக்கு “நீர் செருப்பாய் இருக்கின்றீர்?” என எங்களால் சொல்லமுடியும்

நீர் வரும் மேடை நோக்கி காத்திருக்கின்றோம்

என்னய்யா ஆச்சி உங்களுக்கு?

விரைவாக வாரும், வித்தைகளை மொத்தமாய் காட்டும்.