விரைவில் 2 ஜி வழக்கில் தீர்ப்பு வரும்

“விரைவில், 2 ஜி வழக்கில் தீர்ப்பு வரும்; அப்போது, குதிரை பேர ஆட்சி நடத்தியது யார் என்பது தெரியும்” ‘: பழனிச்சாமி சீற்றம்

ஸ்டாலின் இதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை, கலைஞர் இருந்தால் பதில் எப்படி வரும் தெரியுமா?

“தீர்ப்பு வராத நிலையில், தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என பழனிச்சாமியால் எப்படி சொல்ல முடிகின்றது?

ஆக கழகத்தின் எதிரிகள் எல்லாம், கழகத்தை சாய்க்க வேண்டுமென்ற வன்மம் கொண்டவர்கள் எல்லாம் தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்களோ எனும் அச்சம் மேலோங்குகின்றது

ஒரு மாநில முதல்வர் இப்படி ஆணித்தரமாக சொல்கின்றார் என்றால் அதன் அர்த்தம் என்ன?

பழனிச்சாமியே எச்சரிக்கின்றார் என்றால் உச்சநீதிமன்றம் எதற்கு? நீதிபதி ஷைனி எதற்கு?

இதில் உள்ள அர்த்தம் மிக கடுமையானது, என்னை போலவே தமிழகமும் இதன் அர்த்ததை உணர்ந்திருக்கின்றது

தீர்ப்பு வரட்டும், நான் சொல்வது உச்சநீதிமன்ற தீர்ப்பு அல்ல. தேர்தலில் மக்கள் சொல்லபோகும் தீர்ப்பு வரட்டும்

அதற்கு வழிவிட இவர்கள் தயாரா?

எங்கோ யாரோ ரகசியமாக காட்டிய பக்கங்களை படித்துவிட்டு பழனிச்சாமி பேசுகின்றாரோ என அஞ்சுகின்றேன். நீதியரசர்கள் இதற்கு தக்க பதிலளிக்க வேண்டும்

இல்லாவிட்டால் நாளை தினகரன் தொடர்பான வழக்குகளுக்கு இந்த பழனிச்சாமியே தீர்ப்பு சொல்வார், அதனை நீதிமன்றங்களும் திருப்பி சொன்னால் அது பெரும் பழியாகிவிடாதா? உலகம் சிரித்து விடாதா?”


கொசுறு

ஜெயலைதா மரணம் தொடர்பான விசாரணை , போயஸ் கார்டனில் விசாரணை தொடங்கினார் நீதிபதி

நல்லது, இனி அப்படியே ஆம்புலன்ஸ்லில் ஏறுவார், அப்படியே அப்பல்லோ செல்வார்.

ஜெயா திரும்ப வராதது போலவே, இந்த கமிஷனின் முடிவும் இருந்துவிட கூடாது.