விழுப்புரம் மாவட்டத்தில் கொடுமை
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது
விஷயம் ஒன்றுமில்லை அங்கொரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியினை ஒரு மாணவன் காதலித்திருக்கின்றான், அப்பெண் மறுத்திருக்கின்றாள்
விட்டால் 96 கதை போல் ஆகிவிடும் என அஞ்சினானோ என்னமோ ஒருநாள் வகுப்பில் அந்த பெண்ணை பிடித்து கதற கதற தாலிகட்டிவிட்டான்
கட்டிவிட்டு “நீ தமிழச்சி, இந்த தாலியினை உன்னால் கழற்ற முடியாது, கழற்றினால் நம் கிராமம் விடாது, இனி நீ கலெக்டருக்கு படித்தாலும் என் பொண்டாட்டி” என ரஜினி ஸ்டைலில் சிரித்துவிட்டு சென்றிருக்கின்றான்
விஷயம் கசிந்து பெரும் சிக்கலாகியிருக்கின்றது, பெண் மைனர் என்பதாலும் இன்னும் பல காரணங்களாலும் தாலி அகற்றபட்டிருக்கின்றது
தாலிகட்டிவிட்டு ஸ்டைலாக சுற்றிகொண்டிருந்தவனை பல பிரிவுகளில் வழக்கு போட்டு உள்ளே தள்ளியிருக்கின்றார்கள்
பையன் நிறைய பாக்யராஜ் படங்கள் பார்த்திருப்பான் போல, மாட்டிக்கொண்டான்
பள்ளிக்கு செல்லும் பையன் பையில் தாலி இருக்கின்றதா? என பார்க்கும் அளவு தமிழக நிலை கெட்டு போயிற்று என்பதுதான் பரிதாபம்
கல்விதுறையினை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும், வீட்டில் முடங்கி கிடந்த அப்பெண்ணுக்கு ஊக்கமூட்டி தேர்வு எழுத வைக்கும் முயற்சியில் இறங்கியிருகின்றார்கள்