விவகாரம் வேறு எங்கோ இருக்கின்றது
இரு நாட்களுக்கு முன்பு ஈரான் மேல் போர் என உத்தரவிட்டிருக்கின்றார் டிரம்ப்
முன்பே குறித்துவைக்கபட்ட இலக்குகள் மேல் முதல்கட்ட தாக்குதலை நடத்தி ஈரானை அதிரவைக்க உத்தரவிட்டிருக்கின்றார்
ஆனால் ஏதோ பெரும் காரணத்துக்காக ராணுவம் தாக்க மறுத்துவிட்டது
ஈரானை அடித்தால் எங்கோ உதைக்கும் என்பதும், அதன் விளைவுகள் சாதாரணமாய் இராது என்பதும் அமெரிக்க ராணுவ தலமைக்கு தெரிகின்றது
இது ஈரானை தாக்க தகுந்த நேரம் அல்ல என கருதுகின்றார்கள், அப்படியே வேறு ஏதோ ஒரு முடிவுக்காக அல்லது தகவலுக்காக காத்திருக்கின்றார்கள்
இதனால் டிரம்பின் உத்தரவுக்கு மதிப்பில்லை
விடுவாரா டிரம்ப்?
“ஹிஹிஹி விஷயம் ஒன்றுமல்ல நாம் தாக்கினால் ஈரானில் எவ்வளவு பேர் சாவார்கள் என கேட்டேன் பதிலுக்கு பல ஆயிரம் பேர் என்றார்கள்.
ம்ம் மக்கள் அதிகமில்லா அரசு இலக்குகளை தாக்குங்கள், அதுவும் நள்ளிரவில் தாக்குங்கள் என சொன்னேன்
(மோடியிடம் பேசியிருப்பாரோ?..)
அப்பொழுதும் குறைந்தபட்சம் 150 பேர் சாவார்கள் என சொன்னார்கள்,. அந்த 150 பேருக்காக தாக்காமல் விட்டுவிட்டோம்” என சொல்லி முகத்தில் இருக்கும் மண்ணை தட்டுகின்றார் டிரம்ப்
150 பேரை பலிகொடுக்க அஞ்சும் தேசமா அமெரிக்கா?
இல்லை விவகாரம் வேறு எங்கோ இருக்கின்றது, முழுக்க ஈரானை சுற்றியபின்பும் கை வைக்க அவர்கள் தயங்குவது அதனால்தான்