விவசாயம் வீழ்ச்சியடைந்ததால்…
விவசாயம் வீழ்ச்சியடைந்ததால் உலகெல்லாம் விவசாய பொருட்களின் விலை அதிகரிக்கதான் செய்கின்றது
வருங்காலத்தில் இரண்டே வாய்ப்புதான், ஒன்று விவசாயம் செய்ய வேண்டும், அல்லது வாங்கும் சம்பளத்தை அப்படியே உணவிற்கு செலவழிக்க வேண்டும்
அதுவும் தரமான உணவென்றால் கடன்வாங்கி செலவழிக்க வேண்டும்
விவசாய வீழ்ச்சியும், வியாபார உலகமும் அந்நிலைக்கு கொண்டுவந்தாயிற்று.
விவசாயியும் வாழவில்லை, வாங்குபவனும் உச்சவிலை கொடுக்கின்றான் என்றால் அதுதான் முதலாளித்துவம்
ஜப்பான் போன்ற நாடுகள் இதனை வேறுவிதமாக சமாளிக்கின்றன, அதாவது யாராயிருந்தாலும் கட்டாயம் சிலமணி நேரம் விவசாய வேலை செய்து கட்டாயம் ஒரு பயிர் விளைவிக்க வேண்டும்
அது யாராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒன்றை விளைவித்தே ஆகவேண்டும்
அது இந்தியாவில் பின்பற்றபடாமல் விலைவாசி உயர்கின்றது என கத்தி ஆகபோவது ஒன்றுமில்லை
சர்க்கரை விலை உயர்வு, உலகளாவிய சர்க்கரை விலை உயர்வின் தாக்கம் , இந்தியா தப்ப முடியாது
ஆனால் மண்ணெண்ணெய் விலையினை குறைக்கலாம், கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும்பொழுது அதனை குறைத்து இந்த விலைகளை ஈடுகட்டலாம்
செய்வார்களா? மாட்டார்கள்
கச்சா எண்ணெய்யினை பிரிக்கும் உரிமை பெற்றிருக்கும் அம்பானி போன்றவர்கள் மண்ணையா அள்ளுவார்கள்?
மண் எண்ணெயில்தான் அள்ளுவார்கள்.
விவசாய வீழ்ச்சியும் , உலக சர்க்கரை சந்தை நிலவரமுமே இச்சிக்கலுக்கு காரணம்
எனினும் மானியங்களை குறைக்கும் அரசு, ஏன் ராமசந்திரன் நூற்றாண்டு விழாவிற்கும், ஜெயா மணிமண்டபத்திற்கும் ஏன் கோடி கணக்கில் விரயம் செய்கின்றது என யாரும் கேட்க கூடாது