விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசு காரணம் அல்ல : தமிழிசை

விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசு காரணம் அல்ல : தமிழிசை

அதாவது தற்கொலை செய்த விவசாயிகளை அம்மணி பார்க்க சென்றிருக்கின்றார், சகட்டு மேனிக்கு கேள்விகளை வயலுக்கு அழைத்து சென்று கேட்டிருக்கின்றார்கள்

அவரோ எனக்கு விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாது, ஆனால் மத்திய அரசு காரணம் அல்ல என சொல்லிவிட்டு ஓடிவிட்டாராம்?

விவசாயம் மட்டுமல்ல காவேரி சிக்கல் கூட அம்மணிக்கு தெரியவில்லை

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பினை இன்னும் செயல்படுத்தாமல், அரசு இதழில் அச்சிடாமல் இழுத்து வருவது மத்திய அரசு. அதுதான் காவேரி சிக்கலுக்கு முதல் காரணம்.

ஆக அம்மணிக்கு விவசாயம் தெரியாது, காவேரி தெரியாது, அதன் சிக்கலும் தெரியாது

ஆனால் ஆறுதல் சொல்ல ஆளுக்கு முன்பு சென்றிருக்கின்றார்

ஏம்மா தமிழிசை, உங்களுக்கு பனை மரமாவது தெரியுமா?

தெரியாவிட்டால் அப்பாவிடமாவது கேட்டு தெரிந்துகொள்ள கூடாதா?