விவரம் கெட்ட கட்சி இந்த பாரதீய ஜனதா

சுத்தமாக விவரம் கெட்ட கட்சி இந்த பாரதீய ஜனதா, அதுவும் தமிழக பாஜக மகா மோசம்

தமிழகத்தில் நுழையும் வழியோ, அரசியல் செய்யும் வழியோ சுத்தமாக தெரியவில்லை, சரி தமிழக அரசியலை குழப்பியாவது விடலாம் அல்லவா? அந்த சாதுரியமும் இல்லை

எதனையோ செய்கின்றோம், கட்சி வளர்க்கின்றோம் என இவர்கள் எதில் போய் நிற்கின்றார்கள் தெரியுமா?

ஒவ்வொரு தமிழனையும் பெரியாரை தேட சொல்கின்றார்கள், இவர்களின் ஒவ்வொரு அசைவும் தமிழகத்தை பெரியார் பக்கம் தள்ளுகின்றது.

இவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே பரணில் தூங்கிகொண்டிருந்த பெரியார் கொள்கைகள் தூசுதட்டபடுகின்றன‌.

ஏன் பெரியார் எழுந்தார்? வடக்கத்திய ஆதிக்கம் எப்படியானது? ஏன் அவர் தென்னாடு வேண்டுமென்றார்? அவர் ஏன் நமக்கும் அவர்களுக்கும் பொருந்தாது என்றார்?

அவர் ஏன் மதம் வேண்டாம் என்றார்? அவர் ஏன் சாதி வேண்டாம் என்றார்? ஓஓஓ இதற்குத்தானா? இவ்வளவு கொடுமை நடந்ததா?

இதனால்தான் அவர் போராடினாரா?, இதனால்தான் கடவுள் இல்லை என சொல்ல துணிந்தாரா? அவரிடமும் நியாயம் இருந்திருக்கின்றது என பலர் பேச தொடங்கியாயிற்று.

அப்பக்கம் அந்த ஆதிக்கம் பெருகினால் இப்பக்கம் பெரியார் கொள்கையினை தவிர சமபடுத்த வழியில்லை எனும் அளவிற்கு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்

கொஞ்சம் கொஞ்சமாக பெரியார் தமிழர் மனதில் விழிக்கின்றார்.

இவர்கள் இப்படியான காரியங்களை செய்ய செய்ய பெரியார் கொள்கைகள் இன்னும் வீறுகொண்டு எழும்

அந்த பெரியாரை மறுபடியும் தமிழகம் முழுக்க நிரப்பும் வேலையினை பாஜக செய்கின்றது

பெரியாரின் வாரிசு என சொல்லிகொள்ளும் வீரமணி, திமுக போன்ற கட்சிகள் செய்ய முடியாத “பெரியார் எழுச்சியினை ” இப்பொழுது பாஜக செய்துகொண்டிருக்கின்றது.

பெரியாரை ஆளவைக்கும் பொறுப்பினை இப்பொழுது பாஜக ஏற்றிருக்கின்றது, அதற்காக கடுமையாக உழைத்துகொண்டும் இருக்கின்றது..