விஷயம் வள்ளியூர் பகுதியில் சர்ச்சையாகின்றது

வள்ளியூரில் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கின்றார் விவசாயி, காவலர் அவர் குடித்திருக்கின்றாரா என சோதித்திருக்கின்றனர். இதில் ஏதோ சர்ச்சை நடந்த அவமானத்தில் அவர் நான் குடிக்கவில்லை பூச்சிகொல்லி மருந்து வாங்கவே வந்தேன் என அதனை எடுத்து காட்டி குடித்தும் விட்டார்

குடிக்காதவரை குடித்ததாக போலிசார் அடித்ததில் அவர் பூச்சிமருந்தை குடித்துவிட்டு இறந்திருக்கின்றார் என்ற சர்ச்சை வலுக்கின்றது

அதுவும் போலிசார் முன்னிலையிலே குடித்திருக்கின்றார், அவர்களும் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், ஆபத்தான நிலையில் அவர் மேல் மருத்துவனைக்கு கொண்டுசெல்லபட்டு இறந்திருக்கின்றார்

விஷயம் வள்ளியூர் பகுதியில் சர்ச்சையாகின்றது

சோதனை எனும் பெயரில் விவசாயினை அடித்து கொன்றுவிட்டார்கள் எனும் சலசலப்பு எழுகின்றது

இதனிடையே தந்தையினை காணவில்லை என மகன் புகார் கொடுக்க வந்தபொழுது அவரை அவமானபடுத்திய நிகழ்வும் நடந்தாகவும் செய்திகள் விஷயத்தை தீவிரபடுத்துகின்றன‌

சமீபத்தில்தான் வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் மாற்றபட்டார், மிக வருத்தத்துடன் சில சாபம் இட்டு சென்றிருப்பார் போல..

எப்படியோ திருச்சி கர்ப்பிணிபெண் காவல்துறை சோதனையில் பலியானது போல அடுத்த சர்ச்சை வள்ளியூரில் வெடித்திருக்கின்றது