விஷாலுக்கு அரசியல் என்றால் என்ன என விளங்கிகொண்டிருகின்றது
ஒருவழியாக விஷாலுக்கு அரசியல் என்றால் என்ன என விளங்கிகொண்டிருகின்றது
ஆர்.கே நகரில் விரட்டபட்ட கொஞ்ச நேரம் கூட தாமதிக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தில் வரிந்து கட்டி நிற்கின்றார்கள்
சேரன், டி.ஆர் என இம்சை தாளவில்லை இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள் என தெரியவேஇல்லை, இப்பொழுது ஏன் வந்தார்கள் எனவும் தெரியவில்லை
தயாரிப்பாளர்களை கதற வைக்கும் அன்புசெழியன் பற்றி கேட்டால் அவரை போலீஸ் தேடும், எங்களுக்கு விஷால்தான் குறி என ஒரே அழிச்சாட்டியம்
மைக்கேல் ராயப்பன் போன்ற தயாரிப்பாளரை காணவில்லை சிம்பு அவரை நடுதெருவில் நிறுத்தியிருப்பதால் அங்கேயே நிற்ககலாம்
பெரும் களபேரம் நிகழ்ந்திருக்கின்றது
வழக்கமாக தெருமுனை டீக்கடையில் இருவர் சண்டையிட்டால் வந்து பின்னாலே மிதிக்கும் காவல்துறையினை இந்த சண்டையில் காணவே இல்லை
ஏன்?
அவர்கள் தயாரித்த கொடூர படங்கள் நம்மை போலவே அவர்களையும் பாதித்துவிட்டதோ என்னமோ? எந்த சனியன் செய்த்தாலும் பரவாயில்லை என இருந்துவிட்டார்கள் போல
விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்து சிரிப்பதும், ரஜினி பிறந்த நாளுக்காக பாபா கோவில் வாசலில் இருந்து சிரிப்பதும் விஷாலுக்கு மட்டும் கேட்கும்
விஷால் படும் அடியில் “மகனே ஓடிரு..” என எஸ்.ஏ சந்திரசேகர் மனதிற்குள் கத்துவது மட்டும் எல்லோருக்கும் கேட்கின்றது