வீரனின் கொட்டாவி

பாகிஸ்தான் கொந்தளித்து ஆடிகொண்டிருக்கின்றது, இனி பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாதான் அடைக்கலம் கொடுக்க வேண்டி இருக்கும் போல‌

இந்தியாவுடன் தோற்றதற்கு அங்கு கையில் எதைஎல்லாமோ தூக்கி வைத்து ஆடி கொண்டிருக்கின்றார்கள்.

நமக்கு தெரிந்த பாகிஸ்தானி நண்பர் கேட்டார், கோலி அவுட் இல்லையே ஏன் மறுப்பு சொல்லாமல் போய்விட்டார்?

நாம் சொன்னோம் “உங்கள் அணியினை பார்க்க பாவமாய் இருந்ததாம், ச்ச்சே இவர்களிடமா ஆடுவது அய்யோ பாவம் என அவராக கிளம்பிவிட்டாராம்”

மனிதர் பல்லை கடித்தார், ஏன் பல்லை கடிக்கின்றீர் , கொட்டாவி விடுவதல்லவா உங்கள் பாணி என்றேன். அவர் கண்கள் சிவப்பதற்குள் ஓடிவந்துவிட்டேன்.

பாகிஸ்தானும் அந்த கொட்டாவியில்தான் பற்றி எரிகின்றது

இந்தியா அடித்து நொறுக்கும் பொழுது நீங்கள் கொட்டாவி விட்டீர்களா படுபாவிகளா உங்களை ஊருக்குள் விடமாட்டோம் என திரண்டு நிற்கின்றது பாகிஸ்தான்.

அந்த வீரனின் கொட்டாவி பெரும் சிக்கலாயிற்று, அவரோ நான் பர்கர் தின்றதால் வந்த வினை என்கின்றார்,

ஆனால் நம்பத்தான் யாரும் தயாராக இல்லை

12ம் வகுப்பு கணக்கு பாடத்தை கண்டால் கொட்டாவி விடும் மாணவன் போல அவருக்கு கொட்டாவி வந்திருக்கின்றது, அவர்தான் என்ன செய்வார் பாவம், ரோஹித் சர்மா பின்னால் பந்தை அனுப்பினால்தானே அவருக்கும் வேலை இருக்கும்?

சும்மா நின்றால் தூக்கம்தான் வரும், எப்படியோ அவன் பாகிஸ்தான் திரும்பினால் அவ்வளவுதான்

அதனால் அவன் இந்தியா வரலாம், இந்தியா அவனை பர்கரோடு வரவேற்று அடைக்கலம் கொடுக்கலாம்..

அவனும் பாகிஸ்தான் தூதரகத்தை பார்த்து கொட்டாவி விடலாம்..