வீரபெண்மணி அந்த சாகசத்தை செய்திருக்கின்றார்

குமரிமாவட்டத்தில் அந்த வீரபெண்மணி அந்த சாகசத்தை செய்திருக்கின்றார்

அம்மணியினை ஒருவன் சீண்டிகொண்டே இருந்திருகின்றான் அம்மணி கண்டுகொள்ளாமல் சென்றிருக்கின்றது

மகா பொறுமையாக அவனை கண்டுகொள்ளாமல் அந்த பெண் விலகிசெல்ல அவனோ அத்து மீறதொடங்கிவிட்டான்

அப்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது, அதன் பின் அவனின் பித்தம் தலைக்கேறி மிரட்ட ஆரம்பித்திருக்கின்றான்

இந்த 16 வயதினிலே ரஜினி போல, ஹாஹஹ நா நினைச்சா உன் கல்யாணத்தையே நிறுத்திருவேன் என மிரட்டியிருக்கின்றான்

ஒரு கட்டத்தில் அம்மணியும் அஞ்சி ஒடுங்கி நீ சொன்னதை எல்லாம் செய்கின்றேன் என கதறியிருக்கின்றது

ஆனால் நான் சொன்ன இடத்துக்குத்தான் வரவேண்டும் என சொல்லியிருக்கின்றது, அதில் இருக்கும் சூது தெரியாமல் அவனும் சரியென்று சொல்லியிருகின்றான்

வடைக்கு ஆசைபட்ட பெருச்சாளி போல அவனை மிக சரியான இடத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றது அம்மணி

அங்கு அம்மணி முதலில் திமுகவினர் கையில் சிக்கிய மாரிதாஸை போல அவனைஅடி பின்னியிருக்கின்றது, சிறிது நேரத்தில் உற்றார் உறவினர் பந்து மித்திரரென எல்லோரும் போட்டு அடித்ததில் அவன் மயங்கியே விட்டான்

பாட்சா படத்தில் ஆனந்தராஜ் போல அவன் மருத்துவமனையில் கிடக்கின்றான், பரிசோதித்த டாக்டர்கள் எல்லாம் அதிர்ந்து நிற்கின்றார்கள்

தனக்கு எதிரான சீண்டலை துணிச்சலுடன் எதிர்கொண்ட அந்த குமரி மாவட்டத்து வீரமங்கைக்கு மாநில அரசின் வீர தீர விருதை கொடுக்கலாம்

அம்மணி யாரென தெரியவில்லை ஆனால்
Devi Somasundaram என்பவரிடம் அது ஆலோசனை கேட்டிருப்பது மட்டும் நமக்கு புரிகின்றது