வீ வாண்ட் எய்ம்ஸ் டாக்டர்ஸ் ரிப்போர்ட்..
பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே!
இந்த ரிச்சர்ட் பீலே கடந்த 2 மாத காலமாக செவ்வாய்கிரகத்தில் இருந்தார் என்பதும், நேற்றுதான் பூமிக்கு வந்தார் என்பதும் குறிப்பிடதக்கது
அந்த பீலேவிற்கு பதில் லண்டனில் ஸ்டார்பக்ஸ் காப்பி கலக்கிகொண்டிருந்த ஒருவனை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தாலும் நமக்கெல்லாம் வித்தியாசம் தெரியவா போகின்றது?
இந்த அப்பல்லோ காமெடி டாக்டர்களை விடுங்கள், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் பிரதமருக்கு கொடுத்த ஜெயாவின் உடல்நல அறிக்கை அல்லவா முக்கியம்?
அதனை அவர்களும் கொடுக்கவில்லை, மோடியும் வெளியிடவில்லை ஏன்?
வீ வாண்ட் எய்ம்ஸ் டாக்டர்ஸ் ரிப்போர்ட்..
கொசுறுஸ்
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு
இவர் அமைதியானால் அவர்களும் அமைதியாகின்றார்கள்
இவர் ஒரு பக்கம் நாற்காலி பிடுங்க தயாரானால் அவர்கள் கேஸ் கட்டினை பிரிக்க தயாராகின்றார்கள்
இனி தீர்ப்பு எப்படி வரும் என்று ஓரளவு அனுமானிக்க முடிகின்றதல்லவா?
மறுபடியும் பன்னீருக்கு வாய்ப்பு வரும் போல..
இந்தியாவிலே ஒரு மனிதனுக்கு முதல்வர் வாய்ப்பு வீடு தேடி வருகிறது என்றால் அது பன்னீருக்கு மட்டும்தான்
லட்சியம் நிறைவேறும் உன்னதமான நொடியில் நடராஜன் அப்பல்லோ சென்ற மர்மம் என்ன?
அளவில்லா ஆனந்தத்தின் உச்சியிலும் ஹார்ட் அட்டாக் வரும் போல.
என்ன ஆனந்தமோ
பவுடர் மாமியின் உறவுகள் பெரிதல்லவா? ஆளாளுக்கு ஒரு துறையினை நடராஜனிடம் கேட்டிருக்கலாம், அந்த மயக்கத்தில் அப்பல்லோவிற்கே சென்றிருக்கலாம்..
ஏதோ பெரும் தொல்லையினை அல்லது எதிர்ப்பை எதிர்கொள்ளமுடியாமல் அவர் அப்பல்லொ சென்ற சாத்தியமும் இருக்கலாம்
அப்படி என்ன பெரும் எதிர்ப்பு?
நிச்சயம் பன்னீர் செல்வமாக இருக்கமுடியாது அல்லவா? அதனை தாண்டி யாரோ நடராஜனின் ஆனந்த சயனத்தை கெடுத்திருக்கின்றார்கள்.
அப்பல்லோவில் லண்டன் டாக்டர் பீலே வந்து ஜெயா மரணத்திற்கு விளக்கம் கொடுக்க தயாராகும் பொழுதா நடராஜனுக்கு நெஞ்சு வலி வந்து அப்பல்லோ செல்ல வேண்டும்?
என்ன கொடுமை இது
“அப்பன் குதிருக்குள் இல்லை” என்ற பழமொழி இப்பொழுதா நினைவுக்கு வரவேண்டும்?
தமிழகப் பாடத் திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் : அமைச்சர் பாண்டியராஜன்
எப்படி? ஜான்சி ராணி சித்தப்பா வழி உறவும், வீர மங்கை வேலுநாச்சியாரின் வம்சமுமான சின்ன அம்மாவின் வாழ்க்கை வரலாறு பாடமாக்க படுமா?
சசிகலா பதவி ஏற்பினை வரவேற்கின்றார் திருமாவளவன்
இதே திருமா முன்பு கொடியன்குளம் கலவரத்து காலங்களில், தலித் மக்கள் கொன்றுகுவிக்கபட்ட காலங்களில், சிறுவர்கள் கூட பாதிக்கபட்ட காலங்களில் எப்படி எல்லாம் சசிகலாவினை கண்டித்து பேசிகொண்டிருந்தார்?
அது ஆரம்ப கால திருமா
இப்பொழுது எப்படி மாறிவிட்டார்?, காலம் மனிதனை மாற்றும்,
ஆனால் மனிதனின் நாக்கினையுமா மாற்றும்?