வெனிசுலா அதிபரை கொல்ல சதி
உலகிலே எல்லா வளங்களையும் வைத்து கொண்டு சீரழிந்துகிடக்கும் நாடுகள் பல, அவற்றின் வளமும் வலுவான தலமை இன்மையும் கொஞ்சமும் யோசிக்காத சுயநல மக்கள் கூட்டமுமே இதற்கு காரணம்
முதலிடத்தில் இருப்பது ஈராக், வளமான ஆறுகளும் வற்றாத கச்சா எண்ணெய் ஊற்றுகளும் கொண்ட நாடு, இயற்கை அதற்கு அப்படி அள்ளிகொடுத்தாலும் அந்நாடு உலக அரசியலாலும் போராலும் மதத்தாலும் சீரழிந்து கிடக்கின்றது
ஆப்ரிக்க நாடுகள் பரிதாபம் முறையான அரசும் இல்லாமல் அப்படி அமைந்தால் சட்டம் ஒழுங்கை மதிக்கதெரியாத மக்களால் அது கடும் அழிவில் இருக்கின்றது
இந்த வரிசையில் வெனிசுலாவும் சேர்ந்துவிட்டது
அது தென்னமெரிக்க நாடு, அதன் பெரும் வளம் கச்சா எண்ணெய் அதுவே அந்நாட்டு நிம்மதி கெட காரணமும் ஆயிற்று
எண்ணெய் கம்பெனிகளின் உள்குத்து, உலக அரசியலால் அந்நாடு இப்பொழுது சீரழிந்துவிட்டது
அந்த நாட்டில் முன்பு சாவேஸ் என்றொரு அதிபர் இருந்தார், ஓரளவு எண்ணெய் வாணிபத்தை சரி செய்தார், எண்ணெய் உற்பத்தி நாடுகளை எல்லாம் கூட்டி நியாயமான கோரிக்கைகளை எழுப்பினார்
எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் சாவேஸின் முயற்சி வரலாற்றில் நிற்பவை
இப்படி ஒருவன் எழும்பினால் அமெரிக்காவிற்கு பொறுக்குமா? கொஞ்சநாளில் சாவேசும் புற்றுநோயில் இறந்தார்
அதன் பின் அமெரிக்காவின் வேட்டைகாடு ஆயிற்று வெனிசுலா
எங்கும் குழப்பம் , போராட்டம், ஆர்ப்பாட்டம், பெரும் எதிர்ப்புகள்
நேற்று பிரதமர் மக்களுக்கு உரைவாசிக்கும் பொழுது பறக்கும் டிரோன் ஒன்று வந்து அந்தரத்திலே வெடித்திருக்கின்றது
எப்படி இருக்கும் பாருங்கள்
ஒருநாட்டு அதிபர் உரைவாசிக்கின்றார், திடீரென வானத்தை பார்க்கின்றார் ஒரு பொருள் பறந்து வந்து வெடிக்கின்றது அத்தோடு எல்லோரும் அலறி அடித்து ஓடுகின்றார்கள் என்றால் எப்படி இருக்கும்?
அங்கு அது நடந்திருக்கின்றது, 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். கடும் பாதுகாப்புக்கு இடையில் இது நடந்திருகின்றது
இது அதிபரை கொல்ல அமெரிக்காவும் அதன் கைகூலியான கொலம்பியாவும் செய்த முயற்சி என குற்றம்சாட்டுகின்றது
இல்லை இது சிலிண்டர் விபத்து என்கின்றது இன்னொரு கோஷ்டி
ஆனால் கொலை முயற்சி நடந்தது உண்மை
கச்சா எண்ணெய் முதல் மழைவளம் வரை கொண்ட நாடு வெனிசுலா ஆனால் அதை வைத்து நல்வாழ்வு வாழமுடியவில்லை என்பதுதான் மகா சோகம்
பாதுகாப்பான அரசும், விழிப்பில்லா மக்களும் நிரம்பிய தேசத்தில் பெரும் வளங்கள் கொட்டிகிடப்பது பெரும் சாபம்