வெறியாட்டம் ஆடுகின்றது கொரோனா
192 நாடுகளில் கால் பதித்து வெறியாட்டம் ஆடுகின்றது கொரோனா, சில பல உயிரிழப்பு பாதிப்பு அதை விட அது கொடுக்கும் அச்சம் என கலங்கி நிற்கின்றன நாடுகள்
நிச்சயம் கொரோனா பெரும் ஆபத்து இல்லைதான், ஆயிரம் பேருக்கு வந்தால் அது கொல்வது சிலரையே மீதமுள்ளோர் எளிதாக வெளிவருவர் எனினும் அந்த முடக்கமும் அச்சமுமே கலங்க வைக்கும் விஷயம்
முதியோர்களால் தாங்கமுடியவில்லை, கர்பிணிகள் எளிதாக பாதிக்கபடுகின்றார்கள் அதுவும் இளையோருக்கு வராது என்பதையெல்லாம் நொறுக்குகின்றது லண்டனில் நிகழ்ந்த 20 வயது மாணவனின் கொரோனா மரணம்
நிலமை சீராகுவது போல் தெரியவில்லை, எங்கும் அச்சமும் குழப்பமும் மேலிடுகின்றது, தனித்து ஒதுங்கி தவமிருப்பது ஒன்றே பாதுகாக்கும் வழி
முன்பொரு காலத்தில் தோட்டத்து மரத்தடியிலே வாரகணக்கில் கிடப்பார்களே அப்படி ஒதுங்க வேண்டிய காலமிது. வேறு வழியில்லை
நிலமை இரு வாரங்களில் சீராகலாம் எனினும் சில நாடுகள் மெல்ல ஏப்ரல் 15 வரை நெருக்கடி நிலை என இழுக்கின்றன
கொரொனா நிச்சயம் ஒழியும் ஆனால் அதன் பாதிப்பு இரண்டாம் உலகபோர் காலத்தின் முடிவுக்கு இட்டு செல்லும்
கையிருப்பு நிதி தீரும் நிறுவணங்கள் சிக்கலை சந்திக்கும், நிதி இல்லா கம்பெனிகள் சம்பளம் போனஸ் என எல்லாவற்றையும் வெட்டும் இது காலத்தை பின் நகர்த்தும்
வீடு நிலம் என எல்லா விலையும் வீழும், அரசும் திணறும். வேலை இல்லா திண்டாட்டம் முதல் பெரும் குழப்பம் வரும்
மக்களிடம் பண சுழற்சி வர சில வருடங்கள் ஆகலாம்
அரசுகளும் பெரும் சிக்கலை சந்திக்க, சில நாடுகள் உடைய கூட செய்யலாம்
உலகில் எதனையோ செய்ய காலம் கொரோனாவினை கொண்டு காய் நகர்த்துகின்றது, விளைவுகள் நிச்சயம் இனிமையானதாய் இராது
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று என்பது போல விமானமின்றி ஏவுகனையின்றி துப்பாக்கி இன்றி பெரும் யுத்தம் உலகில் நடந்து கொண்டிருக்கின்றது