வெறும் மிரட்டல்?

மேலதிக துருப்புக்களை பாரசீக வளைகுடா பகுதிக்கு அனுப்புகின்றது அமெரிக்கா, நிச்சயம் பெரும் மிரட்டல்தான்

ஆனால் ஈரானை அடிக்குமா என்றால், அடித்தாலும் அமெரிக்கா நிம்மதியாக அங்கு நிலைக்க முடியுமா என்றால் சிக்கல்

அமெரிக்க கணக்குகள் வேறுமாதிரியானவை, ஆழ அலசி ஆராயாமல் உள்ளே கால் வைக்க மாட்டார்கள்

அதாவது தனிமனித துதி என்றாலோ ஒரே மனிதன் ஆட்சி என்றாலோ புகுந்துவிடுவார்கள், ஒரே மனிதனை வீழ்த்திவிட்டால் நாடு அழியும்

அது ஈராக், லிபியா, வெனிசுலா என பல இடங்களில் நடக்கின்றது. குழம்பிய அம்மக்களை திசை திருப்புவது எளிது

ஆனால் சித்தாந்தம் அப்படி அல்ல, சித்தாந்தத்தால் உருவான கூட்டம் மகா ஒற்றுமையாக எழும்பி நிற்கும் அதை கைவைத்தால் அழிவே மிஞ்சும்

இதை வியட்நாமில் உணர்ந்தது அமெரிக்கா

அந்த சித்தாந்த்ததில் உருவான எந்த இரும்பு நாட்டிடமும் அமெரிக்கா வால் ஆட்டாது, அதாவது மக்கள் புரட்சியாலும் ஒரே சித்தாந்தம் கீழ் வாழும் மக்கள் இருக்கும் நாட்டில் அமெரிக்க திட்டம் பலிக்காது

உதாரணம் சீனா, மிகபெரும் உதாரணம் வடகொரியா

இப்போதைய உதாரணம் ஈரான்

ஆம் தனிநபர் சர்வாதிகாரம் என்பது வேறு, அவனை வீழ்த்திவிட்டால் சகலமும் வீழும் பிரபாகரன்,பின்லேடன் போல‌

ஆனால் சித்தாந்தம் அப்படி அல்ல, தொடர்ந்து தலைவர்களை உருவாக்கி கொண்டே இருக்கும்

அப்படி சீனாவில் நடந்தது, வடகொரியாவில் நடந்தது

இதோ ஈரானிலும் அதுவேதான். கோமேனி ஏற்றி வைத்த வெளிச்சத்தில் மிக தைரியமாக நடைபோடுகின்றது ஒட்டுமொத்த ஈரான்

அமெரிக்கா இன்னும் தயங்கி நிற்பதும் வெறும் மிரட்டலை மட்டும் விட்டுகொண்டிருப்பதும் இதனாலேதான்

சித்தாந்தம் அப்படி மிக பெரும் கூட்டத்தை, கொள்கை வீரர்களால் நிரம்பிய கூட்டத்தை உருவாக்கி நிலைக்குமா சவால் விடுமா? என்ற சந்தேகம் இருந்தால், இன்னும் இருந்தால்

அதிமுக, அமமுகவினை பாருங்கள், காங்கிரஸை பாருங்கள். அப்படியே திமுகவினையும் பாருங்கள் உண்மை புரியும்