வெளிநாட்டு படிப்புகளில் தமிழனுக்கு அவசியமானது நல்ல தமிழ்..

இந்தியாவில் நீட் அது இது என ஏகபட்ட விஷயங்களில் இந்த அரசு இறங்க, வெளிநாட்டு மருத்துவபடிப்பிற்கு ஓடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்கின்றார்கள்

இந்தியாவில் நீட் இம்சையால் அழுபவர்களை பிடிக்க பல வெளிநாட்டு மருத்துவ படிப்பு கல்லூரிகள் கையில் வலை, தூண்டில் சாக்கோடு சுற்றுகின்றார்களாம், தமிழகத்தில் நிறைய கும்பல் சுற்றுகின்றது என்கின்றார்கள்.

சிக்கியவர்களை அப்படியே அமுக்கி தூக்கி செல்கின்றார்களாம்..

ரஷ்யா, முன்னாள் சோவியத் நாடுகள் இன்னபிற நாடுகளுக்கு மருத்துவகல்விக்கு அழைத்து செல்லும் கும்பல்கள் இப்பொழுது கடும் மகிழ்வாக இருப்பதாக நிலவரங்கள் சொல்கின்றன‌

இன்னும் என்னென்ன படிப்பிற்கு வெளிநாடுகளுக்கு அனுப்ப போகின்றார்களோ தெரியாது, ஆனால் நாடு போகிற போக்கில் இனி எல்லா கல்விக்கும் வெளிநாடுதான் தேர்வு போல..

மருத்துவத்தின் வெளிநாட்டுபடிப்பு தரம் நமக்கு தெரியாது, ஆனால் நல்ல தமிழை இனி தமிழகத்திலோ இந்தியாவிலோ படிக்கமுடியாது என்பது மட்டும் புரிகின்றது, தமிழை மிக கொடூரமாக தமிழகத்தில் மாற்றி வைத்திருக்கின்றோம்..

இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் தமிழ்படிக்காமல் இனி தமிழின் தரத்தினை காப்பாற்றமுடியாது

வெளிநாட்டு படிப்புகளில் தமிழனுக்கு அவசியமானது நல்ல தமிழ்..