வெளியுறவு துறை இந்தி திணிப்பு துறையாகிவிட்டது
சீனர்கள் ஹிந்தியும், இந்தியர்கள் சீன மொழியும் கற்பது அவசியம்: சுஷ்மா ஸ்வராஜ்
மோடியின் சீன பயணத்திற்கு முன்பாக பிஜீங் சென்ற அம்மணி இந்த தத்துவத்தை உதிர்த்திருக்கின்றார்
சீனர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும்? “டோக்லஹாமை விட்டு ஓடு” “அக்சாய் சின் பக்கம் விட்டு ஓடியே போ..” என சொல்வதற்கு எதற்கு அவர்களுகு இந்தி???
துப்பாக்கி தூக்கி சுட்டால் போதாதா?
இதை இங்கேயே தமிழர்கள் இந்தியும், இந்திக்காரர்கள் தமிழையும் கற்பது அவசியம் என சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும், சொல்ல வேண்டிய விஷயம் அதுதான்
இந்நாடு இன்னும் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் சகோதரத்துவத்துடன் வளர, நிலைக்க அதனைத்தான் செய்ய வேண்டும்
வடக்கத்தியர்கள் தமிழ் கற்கும்பொழுது இங்குள்ளவர்கள் இந்தி கற்று நல்லுறவு உருவாகுவது தேசத்திற்கு நல்லது
அடுத்த நாட்டு உறவினை விட உள்நாட்டு வலுவும் கூட்டுறவும் முக்கியம் அல்லவா?
அதை எல்லாம் அம்மணி சொல்லமாட்டார்
ஆக இந்தி திணிப்பு சீனா வரை செல்கின்றதா?, அவர்கள் என்ன தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தா போராடுவார்கள்?
தலைவெட்டி போராடும் கூட்டம் அது
இந்தியர்கள் சீனம்கற்க வேண்டும், ஆனால் தமிழ் கற்றுவிட கூடாதா? இந்தி பேசுவோர் மற்ற மாநில மொழிகளை கற்காமல் நேரடியாக சீனம்தான் கற்க வேண்டுமா?
இனி டிரம்பை பார்த்தும் அமெரிக்கர்கள் இந்தி கற்க வேண்டும் என சொல்வாரோ என்னமோ
வெளியுறவு துறை இப்பொழுது இந்தி திணிப்பு துறையாகிவிட்டது