வேதங்கள் அறைகின்ற உலகங்கள் யாவிலும் உயர்ந்தது உன் பாதங்கள்

No automatic alt text available.“வேதங்கள் அறைகின்ற உலகங்கள்
யாவிலும் உயர்ந்தது உன்
பாதங்கள் இவை என்னின்,
படிவங்கள் எப்படியோ “

என்பது கம்பனின் வரிகள். அதாவது மந்திரங்கள் முழங்கும் மூவுலகிலும் மிக உயர்ந்தது இந்த கால்களே. கால்களே இப்படி என்றால் முழு வடிவம் எப்படி இருக்கும் என பாடலை தொடங்குகின்றான் கம்பன்.

நாம் திரையில் குஷ்பூவினை காணும்பொழுது அவன் வரிகளே நினைவுக்கு வருகின்றது.

தலைவி காலை மறைத்து, விரல் மட்டுமே தெரியும் படம் இது, அட அட என்ன அழகு?

கம்பன் இருந்திருந்தால் “உலகங்கள் யாவிலும் உயர்ந்தது இந்த பாத விரல்களே” என தொடங்கியிருப்பான். அவன் இல்லாததால் நாம் தொடங்கலாம்

இந்த அழகிய பாதங்கள் பூமியினை தொட்டு 47 வருடங்கள் ஆகின்றன‌.

ஆம் தங்க தலைவிக்கு, தங்க கோபுரத்திற்கு, குங்குமபூ குவியலுக்கு நாளை பிறந்த நாள்..

அந்த கொண்டாட்டம் உலகெல்லாம் இந்த வரிகளுடன் உற்சாகமாக தொடங்கிவிட்டது,

“வேதங்கள் அறைகின்ற உலகங்கள்
யாவிலும் உயர்ந்தது இந்த பாதங்களே”