வேரற்ற மரமாக வீழ்ந்து கிடக்கின்றான் அறை நண்பன்
வேரற்ற மரமாக வீழ்ந்து கிடக்கின்றான் அறை நண்பன், 8 ஆயிரம் வோட்டு வித்தியாசமெல்லாம் தோல்விக்கு சமமாம், 3 லட்சம் வோட்டு வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டுமாம்
அவனின் தனி திமுக மூளை என்ன சொல்கின்றது என்றால், இந்தியாவே திரும்பிபார்க்கும் அளவும் 7 லட்சம் வோட்டு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றிருப்பாராம்
ஆனால் அப்படி உலகளவில் அந்த வெற்றி கவனிக்கபடுமானால் மோடி அரசுக்கான அதிருப்தி என உலகம் கருதுமாம்
இதனால் அஞ்சிய மோடி அமித்ஷா கோஷ்டி காஷ்மீரில் சவால் எடுத்து சில காரியங்களை செய்து இஸ்லாமியரை திமுகவிடமிருந்து பிரித்து இப்படி வாக்கு வித்தியாசம் குறைந்துவிட்டதாம்
ஏதோ தளபதியும் அவரின் சீமந்த புத்திரனின் தீர சாகசத்தால் இந்த வெற்றி கிடைத்ததாம்
இப்படி சொல்லிவிட்டு “கலைஞரய்யா நீர் இருந்தால் இப்படி நடக்குமாய்யா” என கண்க்களை துடைதது கொண்டிருக்கின்றான்
அவர் இருக்கும்பொழுது இதைவிட மோசமாக நிறைய நடந்திருக்கின்றது என சொல்ல ஆசைதான், ஆனால் சொல்ல இது நேரமில்லை
சொன்னால் இருவரில் ஏதாவது ஒரு உயிர் போவது நிச்சயம்