வைகோ சைமன் மோதல் பெரும் வேதனை தருகின்றது : திருமா இன்னும் பிற…
வைகோ சைமன் மோதல் பெரும் வேதனை தருகின்றது : திருமா
இரண்டு ஈழ பிராடுகள் மோதும்பொழுது இன்னொரு ஈழபிராடு அழுகின்றதல்லவா?
இதுதான் தொழில் பக்தி
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்காது – வைகோ
அதில் இவருக்கொரு மகிழ்ச்சி, அமைந்துவிட கூடாது என எவ்வளவு நம்பிக்கை? , அமைந்துவிட்டால் அன்னாரின் அரசியல் என்னாவது?
காவேரி வெள்ளம் வரட்டும், அதிலே தள்ளிவிடலாம்
தி.மு.க.வில் நான் இல்லாமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருக்கமாட்டேன் – ஆ.ராசா
என்ன சொல்லவருகின்றார் இவர்?
சாதிக் பாட்சாவும் மாவட்ட செயலாளராக இருந்தால் செத்திருக்கமாட்டான் என்கின்றாரா?
மனிதர் தா.கிருட்டினனை மறந்துவிட்டார் போல , அவர் திமுகவில் இருந்ததால்தான் செத்தார்.
இந்த கிரிக்கெட்தான் டெஸ்ட், ஒருநாள் என சுருங்கி 20 ஓவருக்கு வந்துவிட்டதென்றால்
அரசியல் பிரச்சாரங்களும் அப்படி ஆகிவிட்டன
அவனை 15 நிமிடத்தில் பேசசொல், நான் 15 நிமிடத்தில் பேசுகின்றேன் என ஒரே அழிச்சாட்டியம்
மொத்தமே இருவருக்கும் 15 நிமிடம்தான் பேச விஷயம் இருக்கின்றது போல,
நிச்சயம் உருப்படும்.
ஆளுநருடன் நடிகர்கள் விஷால், நாசர் சந்திப்பு, காவேரி மேலான்மை வாரியம் அமைக்க நடிகர் சங்கம் வற்புறுத்தல்
விவரமானவர்கள் இவர்கள், உடன் ஒரு நடிகையினையும் அழைத்து செல்லவில்லை.
இந்த கருத்து கஸ்தூரியினை கூட கூட்டி செல்லவில்லை