வைத்திய சிகாமணிகள் செய்த பெரும் அருமருந்து இது
முன்பு திருவாரூர் பக்கம் ஒரு நாட்டு வைத்தியர் இருந்தாராம், பிரமாதமன வைத்தியர் இல்லை, ஏதோ கைமருந்து, பூச்சிகடி மந்திரித்தல் என செய்துகொண்டிருந்தாராம், கசாயம் எல்லாம் காய்ச்சுவாராம், அவர் பெயர் முத்துவேலர்
அந்த வைத்தியரின் மகன் கலைஞர் கருணாநிதி.
மைசூர் சமஸ்தானத்தின் குறிப்பிடதக்க டாக்டரின் பேத்தி ஜெயலலிதா என்கின்றது ஒரு செய்தி
அப்படியே மன்னார்குடி பக்கம் ஒரு வைத்தியர் இருந்தாராம், அவரும் வைத்தியர்தான் ஆனால் காலம் மாறியபின் மருந்துகடை வைத்திருந்தாராம், அவர் காலத்தில் கசாயம் எல்லாம் இல்லை, அது டாணிக் என மாறி இருந்தது. அவர் பெயர் விவேகானந்தம்
ஆக இந்த வைத்தியர்கள் பரம்பரையில் வந்தவர்கள் கையில் தமிழக ஆட்சி கிடைத்தது
என்ன இருந்தாலும் வைத்திய ரத்தம் அல்லவா? மக்கள் படும் பாட்டினை காண சகிக்காமல் அற்புத கஷாயம், சிறந்த டாணிக் ஒன்றை அரும்பாடுபட்டு உருவாக்கினர்
அந்த வாரிசு வைத்திய சிகாமணிகள் செய்த பெரும் அருமருந்து இது.
அது மதுகடை, பாக்கெட் சாராயம் என மாறி இன்று டாஸ்மாக் என கொடிகட்டி பறக்கின்றது
ஆக இந்த டாஸ்மாக் சரக்கின் மூலம் அந்த கசாயம காய்ச்சிய வைத்தியர்களே அன்றி வேறல்ல
பின்னர் இந்த வம்சங்கள் வேறுமாதிரி காய்ச்சின அவ்வளவுதான்.