வைர விழா காணும் பெங்களூரு விதான சவுதா
கன்னட சட்டசபையின் கட்டமான விதான சவுதா கட்டி முடிக்கபட்டு 60 ஆண்டுகள் ஆன வைரவிழா கொண்டாடபடுகின்றது
அது கன்னட சிற்பி விஸ்வேஸ்வரய்யரின் மேற்பார்வையில் உருவான திட்டம் எனினும் அதற்கு மிக துணை நின்றது தமிழரான பொறியாளர் மாணிக்கம் என்பவர்
இன்றோடு 60 ஆண்டுகள் ஆகின்றன
ஆக தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலமும் சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன, கலைஞர் இதனை கருதித்தான் மிக பிரமாண்ட கட்டிடத்தை சட்டசபைக்காக அழகுற கட்டினார்
ஆனால் தமிழகம் தன் அடிமை மாநிலம் போலவும், தான் மகாராணி போலவும் கலைஞர் வேற்றுநாட்டு மன்னன் போலவும் கருதிய ஜெயலலிதா அந்த திட்டத்தை நாசமாக்கினார்
ஜெயாவழியில் இருக்கும் பழனிச்சாமியும் அதனையே தொடர்கின்றார்
அது மக்கள் பணத்தில் சட்டசபைக்காக கட்டபட்ட மண்டபம், அதில் கால் வைக்கமாட்டேன் என சொல்ல அதிமுகவினருக்கு என்ன உரிமை?
தமிழன் மாணிக்கம் கட்டிய விதான சவுதா வைரவிழா காண்கின்றது
ஆனால் தமிழக சட்டசபை இன்னும் வாடகை கோட்டையிலே இயங்குகின்றது
இந்த அதிமுக எனும் தமிழக சாபத்தால் இங்கு ஏற்பட்டுகொண்டிருக்கும் அவமானம் கொஞ்சமல்ல