ஶ்ரீ வித்யா : அழகிய ராகம்.. அதிசய ராகம்… ஆனந்த ராகம் ….
உண்மையில் உலகெல்லாம் பெரும் ரசிகர்களை ஶ்ரீவித்யா சம்பாதித்திருக்கின்றார்
மலேசிய வானொலியில் அவரின் பாடல்கள் தொடர்ந்து வருகின்றன, அதுவும் அவரின் பிரத்யோக அடையாளமான ” சின்னதாயவள்..” எனும் பாட்டை கேட்கும் பொழுது மனம் கலங்கத்தான் செய்கின்றது
“கற்பூர முல்லையொன்று கை வீசும் தென்றல் ஒன்று..” என அடுத்தபாடல் வரும்பொழுது கண்ணீர் துளிர்க்கத்தான் செய்கின்றது
உலகெல்லாம் அவரை தமிழர்கள் நினைக்கத்தான் செய்கின்றார்கள், அவரின் முத்தாய்ப்பான பாடல்களை இசைக்கவிட்டு அந்த நினைவில் இருந்து வெளிவராமல் பார்த்துகொள்கின்றார்கள்
அந்த கண்ணதாசன் நிச்சயம் தெய்வீக கவிஞானாகத்தான் இருந்திருக்க வேண்டும், அழியா வரிகளை அபூர்வ ராகம் என்றே அப்பாடலை தொடங்கியிருக்கின்றான்
அப்பாடல் நிச்சயம் ஶ்ரீவித்யாவிற்கு காலம் எழுதிய கல்வெட்டு பாடல்
“ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம்…”
என காதில் கேட்கும் பொழுது மலர்ந்து உதிர்ந்துவிட்ட அந்த மலரின் நினைவு வந்து வந்து வாட்டுகின்றது
ஆனாலும் இந்த வரிகள் விட குஷ்பூவிற்கு அழகாக பொருந்தும் என்றொரு குரல் ஆழ்மனதில் இருந்து சொல்லத்தான் செய்கின்றது.