ஷீலா பாலகிருஷ்ணன் விலகுகின்றாராம்
ஷீலா பாலகிருஷ்ணன் விலகுகின்றாராம், நாளை அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டமாம்
அதற்கு முன் அதிருப்தியாளர்களுக்கு எல்லாம் கட்சி பதவியாம்.
இவ்வளவு நாளும் மூடிகொண்டு தூங்கிகொண்டிருந்த அப்பல்லோ ரெட்டி, திடீரென ஜெயாவின் மருத்துவ அறிக்கையினை வெளியிட தயார் என்கின்றாராம்.
ரஜினி ரசிகர்களை சந்தித்தால் விரைவில் அவர் படம் ரிலீசாகின்றது என்பது போல இந்த அறிகுறிகள் எல்லாம் எதனை தெரிவிக்கின்றன?
அதாகபட்டது நாச்சியார் பட்டாபிஷேகத்திற்கான நேரம் நெருங்கிகொண்டிருப்பதற்கான அற்குறிகள் தெரிகின்றன.
அதன் பின் என்னாகும்?
நாச்சியார் இருப்பை தக்கவைக்க ஒரு தொகுதியில் போட்டியிட்டாக வேண்டும்
அந்த மக்களுக்கு பொழுதுக்கு மும்மாரி பணமழை கொட்டபோவது உறுதி, அது எந்த கொடுத்துவைத்த மக்களுக்கோ தெரியவில்லை.
தொகுதி மக்கள் எல்லாம் சுவிட்சர்லாந்து சுற்றுலா அழைத்துசென்றால்தான் வோட்டு என சொன்னாலும் நாச்சியார் கும்பல் ரெடி.
நாச்சியார் இப்படி சுவிஸ் அழைத்து செல்லமாமா? அண்டார்டிக்காவில் ஆளுக்கொரு ஏக்கர் வாங்கிகொடுக்கலாமா? எப்படியாவது வோட்டு வாங்க வேண்டுமே சிந்திக்க,
டெல்லி தீர்ப்பு எப்படி வரப்போகுதோ தெரியவில்லை.
என்ன இருந்தாலும் ஜல்லிகட்டுக்கு டெல்லியில் கதறி நின்ற பன்னீர்செல்வத்தை அந்த அலங்காநல்லூர் ஜல்லிகட்டு எல்லாம் முடிந்த பின் எழும்ப சொல்ல கூடாதா?