ஷோபா, தமிழக திரையுலகம் மறக்கமுடியாத பெயர்
அபூர்வமாக வரும் நல்ல நடிகைகளில் நிச்சயம் அவருக்கு இடமுண்டு, மகா அற்புதமான திறமை அவருக்கு இருந்தது
தன் மிகசிறந்த படங்களில் நடித்தபொழுது அவருக்கு வயது வெறும் 16தான், அப்பொழுதே தேசிய விருதினை அனாசயாக தட்டி சென்றவர்
ஷோபா, தமிழக திரையுலகம் மறக்கமுடியாத பெயர்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குறுகிய காலமே நடித்தாலும், காவிய படங்களில் தன் முத்திரையினை ஆழ பதித்துவிட்ட நடிகை
அவரது திறமையில் தென்னக மொழிகளில் எல்லாம் அந்த 17 வயதிற்குள்ளேயே 100 படங்களை நெருங்கிய நடிகை, அச்சிறப்பு யாருக்குமில்லி ஸிரிதேவிக்கு கூட இல்லை
16 வயதினிலே படமும் பாலசந்தரின் நிழல் நிஜமாகின்றதும் ஒரே படத்து கதை. இரண்டுமே வெற்றிபெற்றன
ஆனால் 16 வயதினிலே கதைக்கு பொருந்தகூடிய நடிகை என ஷோபாவைத்தான் திரையுலம் சொன்னது
அந்த முள்ளும் மலருரும் ஷோபாவும், பசி ஷோபாவும் இன்னும் சில படங்களில் அசைக்க முடியாத நடிப்பினை கொடுத்த அந்த சின்னஞ்சிறிய சிட்டுகுருவி எந்நாளும் நினைவில் இருக்கும்
அவள் ஆயுள் கொஞ்சம் நீண்டிருந்தால் கிட்டதட்ட 2000 வரை தமிழ் திரையில் ஒரு நடிகையும் உதித்திருக்க முடியாது
17 வயதிலே பெரும் உச்சம் பெற்றுவிட்டு, இனி வருங்கால நடிகைகளுக்கு தடையாக இருக்க கூடாது என நினைத்தாரோ என்னமோ வாழ்வை முடித்து கொண்டார்.
அவரின் விதி பாலுமகேந்திரா வடிவில் வந்தது. அந்த பாலுமகேந்திராவினை அவர் 16 வயதிலே திருமணம் செய்தார்
அப்படியே மரித்தும் போனார்
பாலுமகேந்திரா மாபெரும் கலைஞன், ஆனால் அவரோடு பழகியவர்களில் சிலர் ஒருமாதிரி ஆகிவிட்டார்கள், பல திறமைசாலிகளுக்கு கூட ஒருவித மனசிலேகம் வந்துவிட்டது
பாலா அவரிடம்தான் இருந்தார், பாலாவின் படங்களின் கொடூரம் உலகறிந்தது. சுகா என்ற அவரோடு இருந்த அற்புத எழுத்தாளன் இன்று கமலஹாசனின் மய்யத்தில் மய்யமாகிவிட்டார்
இப்படி பலரை திசைதிருப்பிவிட்ட பாலுமகேந்திராவால் ஷோபாவின் வாழ்க்கையும் திசைமாறி முடிந்தே விட்டது
அந்த ஷோபா செத்திருக்க கூடாது, அவரின் கூட்டத்தில் இன்னும் சிலர் அம்முடிவுக்கு வந்திருந்தால் கூட நல்லது. அங்கிள் சைமன் கூட அந்த கோஷ்டியில் கொஞ்சநாள் இருந்தார்
அந்த நெற்றியும் அதிலிருக்கும் பொட்டும், முன்னெற்றியில் ஆடும் அந்த முடியும், குறும்பான கண்களும் , ஆயிரம் முகபாவனைகளை நொடியில் காட்டும் அந்த முகம் தமிழ் திரையுலகின் மிகபெரும் அடையாளம், மாபெரும் நடிகை அவள்
முளையிலே கருகிவிட்ட செடி அது, மொட்டாகவே கருகிவிட்ட அந்த மலர் அது. அவள் விதி அப்படி இருந்திருக்கின்றது
அந்த மகா அற்புத நடிகையின் நினைவு நாள் இன்று. அவளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
அவரின் படங்கள் முடியும்பொழுதெல்லாம் இரு சொட்டு கண்ணீர்வராமல் கடந்து போக முடியாது