ஸ்டான்லி.. யங்மேன்.. எங்கே இருக்க்கே

“ஸ்டான்லி.. யங்மேன்.. எங்கே இருக்க்கே

சார், வீட்ல சார்..வீட்லயேதான் சார்..

எவ்வளவு நேரமா இருக்கே?

சார் ஒரு வாரமா சார்..எங்கேயுமே போகல‌

யூ லயர், பிளடி.. என்கிகிட்டேயே பொய் சொல்றியா., உன் கார் அந்த மால் பார்க்கிங்ல நின்னுட்டு இருந்துச்சி நான் பார்த்தேன், உன்ன பொறுப்பா வீட்ல இருக்க சொன்னா ஊர் சுத்திட்டு இருக்க.., நாளைக்கே ஆபீஸ்னா வந்து எங்கள எல்லாம் கொன்னுருப்ப, அயோக்கிய ரேஸ்கல்.. பிளடி லயர்.. உன்னெல்லாம்

சார் நான் போகவே இல்ல சார்..

அடிச்சி கொன்னுருவேன் கார் எப்படிமேன் வந்துச்சி.. லயர்

சார்.. சந்தேகபடுறீங்க்ளா என் மேலயா?

சந்தேகம் இல்ல, கன்பார்ம் பண்ணிட்டேன், நீ ஒரு சீட்டிங் பெல்லோ

இருக்கட்டும் சார், இந்தியாவுல ஒரு பழமொழி உண்டு

இந்தியா பத்தி பேசுன இடுப்பிலே மிதிப்பேன்

சார்….கார் பாத்தீங்களா?

அதான் பாத்தேனே.

சார் காரை பாத்தீங்களே, என்ன பார்த்தீங்களா?

உன்ன அங்கேயே பிடிச்சி முதுகுல சாத்த தேடி பார்த்தேன், நீ இல்ல ஆனா நீ அங்க எங்கயாவது பீர்குடிக்க போயிருப்ப, அங்கெல்லாம் வந்தா என் மரியாதை கெட்டுரும், பேசாத‌

சார் சிகப்பு டிசர்ட் போட்டு குண்டா ஒருத்தன் அங்க இருந்தானா?

நிறைய பேர் நின்னாங்க, சரியா பார்க்கல்ல அதுக்கென்ன இப்போ

சார், அது ரூம்மேட் சார், வீட்டுகுள்ளே கிடந்தான் சார், பிரட் வாங்க கார் எடுத்துட்டு போனான், டிராபிக் இல்ல பத்திரமா வந்திருதேன்னு போனான் சார்

ஓ.. சாரிப்பா

இல்ல சார் நான் லயர், பிளடி லயர்

இல்லப்பா, மனசுல வச்சிக்காத..

சார் .. உங்களையா.. கம்பெனியே நீங்கதான சார்

வேணாம்ப்பா…

இல்ல சார், இவ்வளவு கவனமா இருக்கிறதுனாலதான் மேனேஜ்மென்ட் உங்களுக்கு அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்திருக்கு?

ஆமாப்பா, என் சுபாவம் அப்படி, இல்லண்ணா ஏமாத்திருவாங்கப்பா.

ஆமா சார், ரொம்ப கரெக்ட் சார்

சரி,கவர்மென்ட் யாரையும் வெளிய போக கூடாதுன்னு சொல்லிருக்கே இவன் ஏன் போனான்?

அவன் அப்படித்தான் சார் ஒரு மாதிரி

அந்த அயோக்கிய பயல வீட்ட விட்டு துரத்துப்பா, கட்டுப்பாடு இல்லாத காட்டுப்பய‌

ஆமா சார், அவன் அப்படித்தான் சார், ரவுடி பய சார்

சுட்டுருவாங்கன்னு சொல்லுப்பா, ஏன் நானே சுடுவேன்..முதல்ல அவனை கார் வாஷ்க்கு போய் கார வாஷ் பண்ண சொல்லு, அப்படியே அவன குளிக்க சொல்லு, வீடு கழுவுற மருந்துல குளிக்க சொல்லு, சீக்கிரம் அடிச்சி விரட்டுப்ப்பா காட்டுப்பய‌

ஆமாசார், நானே அந்த முடிவுலதான் இருக்கேன்

நல்லது யங்மேன், நாமெல்லாம் எப்பவும் ரெடியா இருக்கணும், கம்பெனி நாளைக்கே இல்லை இன்னைக்கே திறந்தாலும் வேலை செய்ய ரெடியா இருக்கணும்

சார் இப்போ சொல்லுங்க சார் ஓடிவாரேன்

வேணாம்ப்பா, அரசாங்கத்தை மதிக்கணுப்பா..சீக்கிரம் நிலமை சரியாயிரும்.. உடம்ப பாத்துக்க, அந்த அயோக்கிய பயகிட்ட சேராதப்பா..சீக்கிரம் அடிச்சி விரட்டுப்பா…”