ஸ்டாலினின் வலியினை விட ராகுலின் வலி நிச்சயம் பெரிது

“நீங்கள் தலைவனை இழந்திருக்கின்றீர்கள் , நான் தலைவனோடு தந்தையினையும் இழந்திருக்கின்றேன்” : செயற்குழுவில் மு.க ஸ்டாலின் உருக்கம்

உருக்கமான வார்த்தைகள், அந்த வலி நிச்சயம் பெரிது

ஆனால் இதே வார்த்தைகள் ராகுல் காந்திக்கும் சால பொருந்தும்

கலைஞரின் நிறைவாழ்வு மரணத்திற்கும், ராஜிவின் கொடூர மரணத்திற்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு

ஸ்டாலினின் வலியினை விட ராகுலின் வலி நிச்சயம் பெரிது, காங்கிரசாரின் வலியும் அப்படியே

ஆனால் இதே ஸ்டாலின் தான் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லிகொண்டிருப்பவர் என்பதுதான் முரண்.

இந்த வார்த்தைகளில் இனியாவது ஸ்டாலின் ராகுலை நினைத்து கொள்ளட்டும்