ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார்
ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார், அதற்குள் நீ என்னவெல்லாமொ எழுதிவிட்டாய், அவர் நெற்றி குங்குமத்தை அழித்த பொற்காட்சி கண்டாயா? ஏ ஆரிய அடிவருடி , இத்தோடு நிறுத்திகொள் என பல உபிக்கள் சீறுகின்றன
எதற்காக சென்றாராம்? ஒரு பொது நிகழ்ச்சிக்காம்
அதாவது கோவிலில் வாழும் ஏழைகளுக்கு உதவி அளிக்க சென்றாராம் , தமிழகத்து பிச்சைக்காரர்களை எல்லாம் திமுக ஒழித்துவிட்டதால் பார்ப்பன அட்டகாசத்தில் கொஞ்சம் பிச்சைக்காரர்கள் திருவரங்க கோவிலில் மட்டும் இருக்கின்றார்களாம்
மிக சரியாக அவர் அங்குதான் நிற்க வேண்டுமா?
மனிதர் சென்றிருக்கின்றார், சென்றால் அங்கு குங்குமம் பூசத்தான் செய்வார்கள் அதனை அழித்திருகின்றார்
முன்னதை விட பின்னதுதான் மகா கொடூரமான செயல்
பந்தியில் ஒருவருக்கு பாசமாக விருந்தளிக்கின்றொம். நாம் இலையில் வைத்த உணவினை அனுமதித்திவிட்டு நான் உண்ணமாட்டேன் என தூர எறிந்தால் சமைத்தவர் மனம் என்ன பாடுபடும்?
ஸ்டாலின் அதனைத்தான் செய்திருக்கின்றார், நல்லவர் என்றால் அவர்கள் திலகமிட வரும்பொழுதே மறுத்திருக்கலாம் மாறாக வாங்கிவிட்டு அழிப்பதெல்லாம் அவர்கள் முகத்தில் காரி உமிழும் செயல்
இதுதான் தீண்டாமை
வடக்கே ஒரு தலித் வீட்டிற்கு சென்றுவிட்டு இங்கு சமைத்ததை நான் உண்ணமாட்டேன் என திரும்பிய பாஜக அமைச்சருக்கும், பிராமணர் என் நெற்றியில் இட்ட குங்குமத்தை அவர்கள் கண்முன்னே அழிப்பேன் என்ற ஸ்டாலினின் கொடூர சிந்தனைக்கும் வித்தியாசமே இல்லை
அது தீண்டாமை என்றால் இதுவும் தீண்டமையே
இஸ்லாமியரோடு ஸ்டாலினுக்கு நோன்பு கஞ்சி குடிக்க தயக்கமிலை, கிறிஸ்தவரோடு கேக் வெட்ட தயக்கமில்லை
ஆனால் இந்துக்களின் நெற்றி குங்குமத்தை அவர்கள் முன்பே அழித்தது மாபெரும் தவறு, இந்துக்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சும் செயல்
இதற்கான விளைவுகள் நிச்சயம் சாதாரணமாய் இராது