ஸ்டானின், டோனி , அன்புமணி, வைகோ, மோடி இன்னும் பிற…
பேராசையை முறியடிப்போம்! மு.க.ஸ்டாலினின் முதல் கடிதம்
பதிலுக்கு ஆம் முறியடிப்போம், அழகிரிக்கும் கனிமொழிக்கும் ஒரு பதவிகொடுங்கள் என யார் எழுதபோகின்றார்கள்?
எழுதினாலும் வெளிவரவா போகின்றது?
கனிமொழி பிறந்தநாளில் இப்படி ஒரு கடிதம் வெளிவருவதில் ஏதும் உள்குத்து இருக்குமோ?
அடேய் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் விலகி இருக்கின்றார்
இன்னும் விளையாடத்தான் செய்வார்..
விட்டால் இன்றே டோனிக்கு பிரிவு உபச்சாரம் நடத்தி வழி அனுப்பிவிடுவார்கள் போலிருக்கின்றது.
புதிய தமிழ்நாட்டை படைப்போம்! திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு!
ஏற்கனவே இவர் தந்தை கண்ட திராவிட நாடு மிக புரட்சிகரமாக உலகிற்கே வழிகாட்டும் போது புதிதாக தமிழ்நாடு எதற்கு?
வேலையற்றோர் தற்கொலையில் தமிழகம் முதலிடம்: அன்புமணி ராமதாஸ் வேதனை
அதாவது படித்துவிட்டு வேலை கிடைக்காதவர் எல்லாம் தற்கொலை செய்கின்றார்களாம் அது அன்னாரை மிகவும் பாதித்துவிட்டதாம்
அவர்கள் படித்தோ படிக்காமலோ இருந்தாலும் வன்னியராக இருந்தால் காடுவெட்டி குருவிற்கு வேலை கொடுத்தது போல டாக்டர் அய்யாவே வேலைகொடுத்திருப்பார்
போராட்டம் எனும் பெயரில் மரம் வெட்டியவர்கள், பாபா படபெட்டியினை தூக்கி ஓடியவர்கள், முன்பு மாமல்லபுரம் கோவில் கோபுரத்தில் கொடி ஏற்றியவர்கள் எல்லாம் பாமக பணியாளர்கள் தான்.
ஒரு சிலர் கலப்பு காதலை கண்டுபிடித்து பிரிக்கும் முழுநேர பணியும் செய்கின்றார்கள், அந்த வேலை வாய்ப்பும் பாமக கட்சியால் உருவாக்கபட்டிருக்கின்றது
அப்படி வன்னியர் தவிர மற்றவர்களின் வேலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பாம்.
ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் தமிழர்களுக்கான நீதியை அழிக்க சிங்கள அரசின் சதி! வைகோ
இவர்தான் அடிக்கடி ஆளுநரையும், மோடியினையும் , தமிழக நிழல் முதலமைச்சரான சசிகலாவினையும் அடிக்கடி சந்தின்றார் அல்லவா?
அந்த சதியினை முறியடித்தால் என்ன? செய்யமாட்டார்
இங்கு கட்சிகளுக்கு இடையில் தரகு வேலை செய்வது, அங்கு நாடுகளுக்கு இடையில் தரகு வேலை செய்வதுதான் இவர் வேலை
ஆனால் ஒரு வியாதி உண்டு
தீடீரென சிங்கள சதி, திராவிட கதி, ஈழதமிழர் மேல் மிதி, கலைஞர் சதி, ஸ்டாலின் சதி என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருப்பார்
ஆனால் ஜெயா, சின்னம்மா என்றால் ஒரே குதி
கண்டெய்னர் நிறைய பணத்தினை தவிர இந்த வியாதிக்கு இப்போதைக்கு மருந்தே இல்லை..
மத்திய அமைச்சகங்களின் செயல்பாட்டை பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகின்றார்
எப்படி? இவர் வெளிநாட்டில் இருக்கும்பொழுது ஒழுங்காக வேலை செய்கின்றார்களா இல்லையா என கண்காணிக்கின்றாரோ?
பண பிரச்சினை சறுக்கலில் மனிதர் சீரியசாகிவிட்டார் போல..